Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 3

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 9 months ago
Messages: 9
Thread starter  

தளிர் - 3

 

அன்று காலைப் பொழுதில் தனது அன்றாட ஓட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தால் பெண் அவள் இதழினி , வயதோ 24 அதற்கு ஏற்றார் போல் இருக்கு அழகு , அவள் வேலை செய்வதோ நந்தன் ஹோட்டல் . 

 

அந்த ஹோட்டலின் உரிமையாளரான நந்தனோ வாமா இதழினி என்று அவளை வரவேற்க அவளோ குட் மார்னிங் சார் என்றுவிட்டு தன் அன்றாட பணியில் ஈடுபடத் துவங்கினால் .

 

மாலை நெருங்கும் நேரம் , நந்தனோ எம்மா இதழ் நேரம் ஆகிட்டு நீ கிளம்புமா என்று அவர் கூற

 

இதழோ தான் கிளம்பறேன் சார் என்றுவிட்டு தன் பையை எடுக்க .

 

நந்தனோ எம்மா இதழ் நம்ம சாப்பாடு பிடிச்சு போய் ஒரு பெரிய கம்பெனி நமக்கு அவங்க கேண்டீன் லீசுக்கு விட்டு இருக்காங்கமா என அவர் புன்னகையுடன் கூற

 

இதழோ ரொம்ப சந்தோஷம் சார் என்று அங்கிருந்து கிளம்ப தயாராக 

 

அவரோ அந்த இடத்தை பாத்துக்க உன்ன தான்மா போடப்போறேன் என்று அவர் கூற 

 

இதழோ சார் நான் எப்படி அதை பாத்துக்க முடியும் வேற யாராவது போடுங்க என்று அவள் மறுப்பாக கூற 

நந்தனோ இல்லமா வேற யாரும் உன் அளவு திறமைசாலி இல்ல , எனக்காக இதழ் என்று அவர் கேட்க 

 

மறுக்க முடியாத இதழோ சரி சார் எந்த கம்பெனி என்று அவள் கேட்க 

 

சக்கரவர்த்தி இன்டஸ்ட்ரீஸ் என்று அவர் கூற 

 

இதழோ சரி சார் எப்போ இருந்து போகனும் 

 

அவரோ இன்னும் ஒரு வாரத்துல அங்க போற மாதிரி இருக்கும்மா 

 

சரி சார் என்று அவள் வெளியேறிவிட 

ஆயிற்று புது கேண்டீன் திறந்து அது நன்றாக சென்று கொண்டிருந்தது , இதழ் நினைத்ததைவிட சற்று பெரிய கம்பெனி அது 

 

அந்த கம்பெனி உரிமையாளன் நெடுஞ்செழியன் பல வருடங்கள் கடந்து தன் அடையாளத்தை வெளி உலகிற்கு காட்டாதவன், இன்று தன் சென்னை கம்பெனிக்கு வருவதாக கூறப்படும் செய்திதான் இன்று ஊடகங்களில் பேசப்படும் பொருளாக இருக்க .

 

அதே நேரம் கம்பெனி முன் ஒரு வாகனம் வந்து நின்றது அதில் இருந்து இறங்கினான் நெடுஞ்செழியன் , ஆறடி உயரம், கட்டுக்கோப்பான உடல் , அனைவரையும் நடுங்க செய்யும் தோற்றம் அவனுடையது, வயதோ 34 , இளம் வயதில் இவ்வளவு சாதனை படைத்தவன் . 

 

இதழும் ஏன் இவ்வளவு பதட்டம் என்று வெளியே சென்று பார்க்க அங்கு இருந்த நெடுஞ்செழியனை கண்டவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

 

யாரை தன் வாழ்நாளில் இனி சந்திக்கவே கூடாது என்று எண்ணி இருந்தாலோ அவன் அல்லவா அவள் கண் முன் நிற்கிறான் .

 

நெடுஞ்செழியனோ அங்கு இருக்கும் யாரையும் கண்டு கொள்ளாமல் தன் அலுவலகத்தில் நுழைய அவனை தடுத்த பத்திரிக்கையாளர்களோ 

 

சார் ,சார் என்று அவனை அழைக்க அவனோ சொல்லுங்க என்று அவர்களை அழுத்தமாக பார்க்க 

 

அவர்களோ சார் இவ்ளோ நாள் நீங்க உங்களுடைய அடையாளத்தை காட்டாது காரணம் என்ன அப்படின்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா என்று கேள்வி கேட்க 

 

செழியனோ சில காரணங்களால் நான் என்னோட அடையாளத்தை காட்ட விரும்பள, அதோட மக்களோட மக்களா இருக்க எனக்கு பிடிக்கும் சோ அதனால நான் என் அடையாளத்தை வெளிப்படுத்தல என்று விட்டு அவன் விறு விறு என அலுவலகத்தின் உள்ளே சென்றுவிட்டான் .

 

அவன் பின்னே வந்தவர்களோ அவன் நடைக்கு ஏற்ப அவன் பின்னே ஓடத் தொடங்கினர் . அந்த இடமே புயல் அடித்து ஓய்ந்தார் போல் இருந்தது. 

 

அவன் அறையின் உள்ளே நுழைய அவனை வரவேற்றது அவனது நண்பனும் , அவனது உதவியாளன் ஆன கதிர் அவனை வரவேற்றான் . 

 

அவனோ வெல்கம் சார் என்று அவனை வரவேற்று அங்கிருக்கும் இருக்கையை காட்ட 

செழியனோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி கதிரை நோக்கியவன் , எல்லாம் எப்படி கதிர் போய்ட்டு இருக்கு என்று கேட்டுக் கொண்டே தன் முன் இருந்த லேப்டாப்பை ஆன் பண்ண 

 

கதிரோ எல்லாம் நல்ல போய்ட்டு இருக்கு சார் , அப்புறம் கம்பெனி பொறுப்பு எடுத்துக்கிட்டதுக்கு வாழ்த்துக்கள் சார் என்று அவன் வெளியே சென்றுவிட 

 

அதன் பின் செழியன் தனது பணிகளை மேற்கொண்டான் 

 

இங்கு இதழுக்கோ என்ன செய்வதென்றே புரியா நிலை அவனை பார்த்தது முதல் இப்போது வரை அவளுக்கு படப்படப்பு நீங்கவில்லை , அதே சமயம் கண்களில் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது தான் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து சட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டு தனது பணிகளை கவனிக்க தொடங்கினால் .

 

செழியன் அறையிலோ தனது பணியை செய்து கொண்டிருந்தவனை அழைத்த கதிரோ செழியா சாப்பிடலாம் வா என்று அழைக்க 

 

அவனோ ஓகே போலாம் என்று எழுந்துகொண்டு கேன்டீன் நோக்கி நடக்க தொடங்கினான்

 

இங்கு அனைவருக்கும் ஒரே சாப்பாடே, இதில் அவன் என்றும் பிரித்து பார்த்தது இல்லை , அனைவரும் இங்கு சமமே என்பது செழியனின் எண்ணம் .

 

உணவு உண்ணும் இடத்தில் நுழைய அங்கு இருந்தவர்களிடம் ஒரு சிறு சலசலப்பு அதை உணர்ந்தவனோ இட்ஸ் ஓகே நானும் ஒரு worker தான் சோ என்னப் பார்த்து ஒன்னும் பயப்பட வேண்டாம் என்று அவன் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

 

அதன்பின் அவனுக்கான சாப்பாடு கொண்டு வரப்பட்டது . அதை உண்டவன் ஒரு வாயில் அதை யார சமைத்து இருப்பார்கள் என்று அறிந்து கொண்டவன் விழிகள் அந்த நபரை தேடியது 

 

அதே அருகில் இருந்த கதிரோ சாப்பாடு சூப்பரா இருக்கே , புது ஆளுங்க எப்படி செய்வாங்க அப்படின்னு ரொம்ப யோசிச்சேன் , ஆனா நல்லா பண்ணி இருக்காங்க என அவன் ஒரு பக்கம் பராட்டு பத்திரம் வாசிக்க  

 

செழியனோ அதை எல்லாம் எங்கு கண்டு கொண்டான் அவனுக்கு இதை சமைத்த நபரைத் தேடியே கண்கள் அலைமோதியது அங்கிருக்கும் நபரை அழைத்தவன் யாரு சமைச்சது அவங்கள வர சொல்லுங்க 

 

அவரோ நான் தான் சார் சமைச்சேன் என்று அவர் கூற 

 

அவனோ அவரையே அழுத்தமாக பார்க்க அந்த நபருக்கோ அவன் பார்வையே பயத்தை கிளப்பியது . 

 

அதை கண்ட அந்த நபரோ உள்ளே சென்று இதழை அழைக்க 

 

அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது .

அவளோ பயந்தபடி அங்கிருந்து அவன் அருகில் வர வர அவளுக்கோ ஏகத்துக்கும் பயம் ஏறியது .

 

செழியனோ தன் வந்து நின்றவளை அழுத்தமாக பார்க்க அவளுக்கோ கை, கால்கள் எல்லாம் நடுங்கி போனது , 

 

செழியனோ அவளை உறுத்து விழித்தபடியே சாப்பாடு நீங்க தான் செஞ்சீங்களா என்று கேட்க 

 

அவளோ ஆம் என்பது போல் தலையாட்ட.

 

செழியனோ எனக்கு பதில் வேணும் மேடம் வாய்திறந்து பதில் சொல்லுங்க என்று அவன் ஒரு அதட்டல் போட .

 

அவளோ அவன் அதட்டலில் ஒரு கணம் உடல் அதிர நான் தான் சார் சமைச்சேன் என்று கூற .

 

அவனோ அப்படியே எழுந்து அங்கிருந்த தட்டில் கைகழுவி விட்டு அங்கிருந்து அகன்றான் .

 

கதிரோ அவனின் இந்த நடவடிக்கையை வித்தியாசமாக பார்க்கத் தொடங்கினான் .

 

அதே நேரம் தனது அறைக்கு வந்த செழியனுக்கு அப்படி ஒரு ஆத்திரம் யாரை பார்க்கவே கூடாது என்று நினைத்தானோ அவளை அல்லவா கண்டுள்ளான். அங்கிருந்த டேபிளை ஓங்கி ஒரு தட்டு தட்ட அதுவோ ஒரு நொடி ஆட்டம் கண்டது .

 

அப்போது உள் நுழைந்த கதிரோ என்னடா அப்படியே வந்துட்ட சாப்பிடலை என்று அவன் கேட்க 

 

செழியனோ சாப்பிட தான செய்யனும் சாப்பிட்டா போச்சு என்று இதழை அழைக்க சொல்ல 

 

அவனோ அவனை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே இதழை அழைக்க 

அங்கு வந்த இதழுக்கோ என்ன செய்வதென்றே புரியா நிலை 

 

செழியனோ கதிர் நீ வெளிய போ என்று அவனை அனுப்பிவிட்டவனோ. 

 

இதழ் பக்கம் திரும்பி என்ன அங்கேயே நிக்கிற சாப்பாடு யாரு எடுத்து வைக்கிறது என்று அவன் குரல் உயர்த்த 

 

அவளோ பயத்துடன் அவன் அருகில் சென்று உணவு எடுத்து வைக்கத் தொடங்கினால் .

 

செழியனோ அவளை மேல் இருந்து கீழாக பார்க்கத் தொடங்கினான் ஒரு நீல நிற சுடிதார் , ஒரு கிளிப்பில் அடங்கிய கூந்தல் , அது இடைவரை நீண்டு கிடக்க , வட்ட முகம் , அரை வடிவ நெற்றி அதில் ஒரு பொட்டு , திருத்தப்படாத புருவம், கருவண்டு விழிகள், சிவந்த நாசி, தேன் சிந்தும் உதடு, வலம்புரி கழுத்து அதில் ஒரு மச்சம், முழு காலர் வைத்த சுடிதார் அது அவன் தேடியது அவள் கழுத்தில் கிடைக்கவில்லை போல அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது . 

 

இதழோ அதற்கு மாறாக எனக்கு உணவு எடுத்து வைப்பது மட்டுமே எனது வேலை என்று கருத்தாக இருக்க 

 

செழியனோ என்ன மேடம் இங்க யார புடிக்க வந்தீங்க என்று அவன் வார்த்தை ஈட்டியாக இறங்க 

 

இதழோ ஒரு கணம் அதிர்ந்து பின் தன்னை சமன் படுத்திக் கொண்டவள் , அவனிடம் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து அகல 

 

சட்டென அவள் கையை பிடித்து தனக்கு நெருக்கமாக நிற்க விட்டவனோ பேசிட்டு இருக்கேன்ல அப்புறம் பதில் சொல்லாம போன எப்படி என்ற பல்லைகடித்துக் கொண்டு கேட்க .

 

அவளோ அவனிடம் இருந்து தன் கையை விடுவிக்க போராட அவனோ இன்னும் அழுத்தமாக பிடித்தானே தவிர விட்டான் இல்லை 

 

சொல்லுடி இன்னும் எத்தனை பேரு வேணும் உனக்கு என்று அவளை தள்ளிச் சென்று சுவரில் அழுத்த 

 

அவளோ அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் மரண வலியை அனுபவித்துக் கொண்டிருந்தால் .

 

அவனோ அவளின் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவாறு அவள் இதழ் நோக்கி குனிய அவளோ அவன் செய்யப் போகும் செயல் நினைத்து அவனை தன்னிடம் இருந்து தள்ள நினைக்க 

அவனிடம் அவள் வெல்ல முடியுமா தோற்றே போனால் .

 

சிறிது நேரம் கழித்து தனது இடையோரம் கிழிந்து போன சுடிதாரை இழுத்து பின் குத்திக் கொண்டு , ரத்தம் கசிந்த உதட்டை துடைத்துக் கொண்டே கண்ணீருடன் வெளியே ஓடினால். 

 

அதே நேரம் செழியனோ அவள் அருகில் இருந்தால் மட்டும் தடுமாறும் தன் மனதை என்ன செய்ய என்று புரியா நிலை, அவள் மேல் அவ்வளவு கோபம் இருக்கிறது ஆனால் அவன் செய்தது கோபத்தினாலா என்று கேட்டால் அவனிடம் அதற்கு பதில் இல்லை .

 

தொடரும்...

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top