Share:
Notifications
Clear all

அத்தியாயம் - 2

 

(@aval-porsuvai)
Member Moderator
Joined: 9 months ago
Messages: 9
Thread starter  

தளிர் - 2 

 

அது அழகிய பூஞ்சோலை கிராமம் , பெயருக்கேற்றார் போல் பூத்துக் குலுங்கும் கிராமம் அது , எங்கு பார்த்தாலும் நெல் விளைந்த வயல்களும் , அது காற்றுக்கு ஏற்றார் போல் அசைந்து ஆடுவது கடல் அலை மேல் எழும்பி கீழ் வருமே அது போல் 

காட்சி அளித்தது .

 

அதை எல்லாம் கடந்து ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது , இவ்வளவு அழகான காட்சிகள் கொட்டிக் கிடக்க ,அதை எல்லாம் கவனம் இல்லாமல் சென்று கொண்டிருந்தான் அந்த வாகனத்தில் இருந்தவன் .  

 

எனக்கு இதை கவனிக்க நேரமும் இல்லை மனமும் இல்லை என்பது போல் அவன் தன் காதில் மாட்டிக் கொண்டிருந்த bluetooth வழியாக போனில் பேசிக் கொண்டே அந்த ஊரில் அவன் வாங்கிய புதிய பண்ணை வீட்டை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தான் அவன் பாண்டியன் .

 

அந்த வீடோ அந்த ஊரை விட்டு தள்ளி இருக்கும் இடம் வீட்டின் முன் வந்து நின்றது அந்த வாகனம் .

 

அதில் இருந்து இறங்கிய பாண்டியனை வரவேற்றது அங்கு பணிக்கு இருக்கும் சுந்தரம் , அவரோ வாங்க தம்பி என்று அவனை வரவேற்க 

 

பாண்டியனோ என்ன சுந்தரம் எல்லா ரெடியா, பாத்துட்டீங்களா எல்லாம் சரியா இருக்கா என்று கேட்டுக் கொண்டே வீட்டின் உள் நுழைய அவரோ எல்லாம் சரியா இருக்கு தம்பி என்று அவர் சொல்ல .

 

வீட்டின் உள் நுழைந்த பாண்டியனோ அனைத்தையும் சுற்றி பார்த்தான் அனைத்தும் நன்றாக இருந்தது . 

 

தம்பி நீங்க இங்க தங்க போற நாளுக்கு தேவையான எல்லாம் செஞ்சு வச்சுட்டேன் , அப்புறம் சமையலுக்கு மட்டும் ஒரு அம்மா வருவாங்க . அவங்க இங்க இருந்து கொஞ்ச தூரத்துல இருக்காங்க . நான் இப்ப ஊருக்கு கிளம்பறேன் தம்பி என்று அவர் சென்றுவிட. 

 

பாண்டியனோ சுந்தரம் என போகும் அவரை அழைக்க அவரோ என்ன தம்பி என திரும்பி கேட்க 

 

அவனோ ரொம்ப நன்றி என கூற 

சுந்தரமோசிறுபுன்னகையுடன் பரவாயில்ல தம்பி என்று அவர் அங்கிருந்து அகன்றார்

 

பின் மேலே சென்று அங்கு இருந்த அறையில் கண்ணயர்ந்தான் .

 

அவன் கண் முழிக்கும் நேரம் மாலை நான்கு மணி , கீழே ஏது உருட்டும் சத்தம் கேட்டு சத்தம் வரும் இடம் நோக்கி அவன் நடக்க ,அதுவோ சமையல் அறை .

 

அங்கு ஒருத்தியோ தனக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் , மாவு டப்பாவை எக்கி எடுத்துக் கொண்டிருக்க .

 

அவளை கண்ட பாண்டியனோ ஏய் யார் நீ என்று ஒரு அதட்டல் போட 

 

திடீரென கேட்ட குரலில் பயந்த பெண்ணவளோ மாவு டப்பாவை அப்படியே இழுத்துவிட அதுவோ அவள் தலையில் கொட்டி மாவு அபிஷேகம் நடந்தது . 

 

அதை கண்டவன் இதழில் ஒரு மெல்லிய புன்னகை, அவள் அருகில் சென்றவனோ மீண்டும் அதட்ட , 

 

அவளோ நான் நான் என திணற 

 

அவனோ அதான் நீ யாருன்னு கேட்டேன் என மறுபடியும் அதட்ட

 

அவளோ அவன் அதட்டலில் பயந்தவள் நான் சமைக்க வந்தேன் என், என் பேரு தென்றல் என அவள் கூற . 

 

அவனோ சமைக்க ஒரு அம்மா தான் வருவாங்கன்னு சுந்தரம் சொன்னார் ஆனா நீ வந்து இருக்க என குரல் உயர்த்தி கேட்க 

 

அவளோ அது என் பாட்டி தான் அவங்களுக்கு உடம்பு சரியில்ல அதான் நான் வந்தேன் என்று அவள் பயத்துடன் கூறி முடிக்க . 

 

அவனோ ஓகே சாப்பாடு ரெடியா என கேட்க 

 

அவளோ இன்னும் கொஞ்ச நேரத்துல ரெடி ஆகிடும் சார் என அவள் அந்த மாவுடன் பாத்திரத்தை உருட்ட 

 

அவனோ முதல்ல அந்த மாவ சுத்தம் பண்ணிட்டு வேலைய பாரு என்று அங்கிருந்து அகன்றான் .

 

அவன் சென்ற பின் தான் பெண்ணுக்கோ மூச்சே வந்தது , அவள் தென்றல், அழகு ஐந்தரை அடி சிற்பம் , வயதோ பதினெட்டு , பார்ப்போம் திரும்பி பார்க்க வைக்கும் அழகு , அவளுக்கு ஒரு பாட்டி , எப்படியோ பன்னிரண்டாவது வரை படித்துவிட்டாள் , ஆனால் அதற்கு மேல் படிக்க வாய்ப்பு கிட்டவில்லை . 

 

அங்கு இருந்து வெளியே வந்த பாண்டியனோ கிரேஸி கேர்ள் என்று ஒரு சிரிப்புடன் முனுமுனுத்தான் .

 

அதன் பின் ஒரு மணி நேரத்தில் அனைத்தும் முடிந்து அவள் டேபிளில் அனைத்தும் அடுக்கினால். 

 

அங்கு வந்தமர்ந்த பாண்டியனோ அப்போது தான் அவளை நன்றாக கவனித்தான் , பார்ப்பதற்கே சிறு பெண் என்று சொல்லிவிடும் அளவு தான் அவளது தோற்றம் , பிறை நெற்றி, கயல் கண்கள், கூர் நாசி , ரோஜா இதழ்கள் , வலம்புரி கழுத்து , என அவன் எண்ணம் எங்கோ செல்வதை கண்டு திகைத்தான்.

 

பாண்டியன் , பின் அவன் சாப்பிட தொடங்க , தென்றலோ அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அங்கிருந்து கிச்சன் உள்ளே சென்று விட்டால் . இவ்வாறாக அனைத்தும் முடிந்து அவள் அவனிடம் சொல்லிவிட்டு செல்ல தயாராக அவன் முன் வந்து நின்றவளை என்ன என்பது போல் பார்த்தவன் 

 

தென்றலோ நான் கிளம்பறேன் சார் என்று அவள் கிளம்ப தயாராக 

 

அவளை அழைத்த பாண்டியனோ தென்றல் இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்தது என பாராட்ட 

 

அதை கேட்ட தென்றலுக்கோ அவ்வளவு மகிழ்ச்சி  

 

ரொம்ப தேங்ஸ் சார் என்று அங்கிருந்து அகன்றால் போகும் அவளையே விழி அகலாமல் நோக்கினான் அவன் பாண்டியன் , வயதோ இருபத்தி ஒன்பது , ஆறடி உயரம் , மாநிறம் கொண்ட ஒரு அழகன் , கட்டுக்கோப்பான உடல் , அழுத்தமான முகம் என அவனது தோற்றம் இருந்தது .  

 

இவ்வாறாக தென்றல் தினமும் வருவதும் , சமைத்து வைப்பதும், என அவர்கள் நாட்கள் சென்றது , அதேபோல் அன்று ஒரு நாள் அதிக மழை அதில் நனைந்தபடி தனது மாலை நேர ஓட்டத்தை முடித்துவிட்டு வந்தான் பாண்டியன் , அப்படியே ரூமுக்கு சென்றவனோ தனது உடையை கலந்து விட்டு , வேறு உடை மாற்றிக் கொண்டு பெட்டில் படுத்து விட்டான் .

 

காலை சமையல் செய்து விட்டு காத்திருந்த தென்றலோ என்ன இன்னும் வரல என்று மேலே ஏறிச் சென்று அவனது அறையை திறந்து பார்க்க அவனோ போர்வையின் உள் சுருண்டு கிடக்க , அவனை கண்ட தென்றலோ சார் , சார், என பதட்டத்துடன் அவன் கன்னம் தட்ட , அவனோ ம்ம் என்ற முனகல் மட்டுமே அவனிடம் உடல் நெருப்பு போல் கொதித்தது.  

 

தென்றலுக்கோ என்ன செய்வது என்றே தெரிய வில்லை பின் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றவளோ அங்கிருந்த மருத்துவரை அழைத்து வந்து அவனை பார்க்க செய்ய அவரோ பெருசா எதுவும் இல்ல , மழையில நனைஞ்சதால காய்ச்சல் அதான் , என்றுவிட்ட அவரோ 

இந்த மாத்திரை கொடுங்க சரியாகிடும் என அவர் சென்றுவிட 

 

தென்றலோ சார் சார் என அவனை மெதுவாக எழும்பி அமர வைத்து உணவு , கொடுத்து மாத்திரையும் கொடுத்து உறங்க வைத்தால் .

 

அதன் பின் அன்று முழுவதும் அவளோ அவனை கவனித்துக் கொள்ள மாலை கண் விழித்த பாண்டியன் தன் முன் கண்டது தென்றலின் முகம் மட்டுமே அவனோ 

 

நீ இங்க என்ன பண்ற என்று கேட்டவாறு எழுந்து அமர , 

 

அவளோ சார் இப்போ உங்களுக்கு நல்லா இருக்கு தான என்று அவள் கேட்க

 

அவனோ நான் நல்லா இருக்கேன் 

 

தென்றலோ சட்டென அவன் நெற்றியில் கைவைத்து பார்க்க 

 

பாண்டியனுக்கு சற்று திகைப்பு என்ன செய்கிறால் இவள் 

 

தென்றலோ அப்பா இப்போதான் காய்ச்சல் குறைஞ்சு இருக்கு என தன் கையை அவன் நெற்றியில் இருந்து எடுக்க 

 

அவனுக்கு என்ன உணர்வு என்றே தெரியாத நிலை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க 

 

தென்றலோ நீங்க ரெடி ஆகிட்டு வாங்க சார் நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என அவள் கீழே சென்றுவிட .

 

பாண்டியனுக்கு என்ன உணர்வு என்றே புரியா நிலை . 

 

தொடரும்...

 

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top