இறுதி அத்தியாயம்
வீரா சஞ்சயன் விஷயத்தை யாரிடமும் கூறவில்லை. எப்படி நம்புவார்கள்? கூடவே வளர்ந்த ஜெகன் ஆனாலும் சரி.. நட்பாக இருந்த தர்மாவானாலும் சரி.. அவன் நல்லவன் என்று சான்றளிக்க.. எப்படி உரைப்பான் அவன் விஷம் என்று!!
அந்த விஷயத்தை தன் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டான். அதற்கு அடுத்து அம்பலவாணன் செய்த கொலைகளை பற்றி மெல்ல மெல்ல தோண்டி துருவ ஆரம்பித்தான். இடையே முப்பதாம் நாள் காரியம் முடிந்ததும், மகளின் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி விட்டு தான் பார்த்திருந்த மாப்பிள்ளையை வைத்து உடனடியாக திருமணம் நடத்த அம்பலவாணன் செய்த முயற்சியை கேள்விப்பட்ட வீரா, கொதித்தெழுந்து "இனி அவள் எனக்கு மட்டுமே!!" என்று முடிவெடுத்தான்.
அதன்படி கூடியிருந்த சபையில் அம்பலவாணன் பேசுவதற்கு முன்னே புயலென உள்ளே நுழைந்தவன் தன் கையிலிருந்த தாலியை அவள் கழுத்தில் கட்டி அருகிருந்த குங்குமத்தை அவள் நெற்றியிலும் கழுத்திலும் வைத்தவன், யாரையும் எதையும் கேட்காமல் அவளை கையோடு இழுத்து வந்து விட்டான் தன் வீட்டிற்கு.
அனைத்தையும் வீரா அம்பலவாணனிடம் சொல்லி முடித்தான். அவனது முகம் அவ்வளவு இறுக்கத்தில் இருக்க கைகளை பின்னால் கட்டிக்கொண்டு அவன் பார்த்த பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்தார் அம்பலவாணன்.
ஒரு வார்த்தை பேசவில்லை அவர். மெல்ல நடந்து கதவு வரை சென்றவர் அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அதில் என்ன இருந்தது வலியா?? வருத்தமா?? ஏதோ ஒன்று இனி இதை நினைத்து அவர் தினம் தினம் அழுக வேண்டும் என்று தான் அவன் அவ்விஷயங்களை சொன்னது.
அதேபோல அடுத்த ஹேரங்கி சஞ்சயனை கொன்றது தான் தான் என்று அவர் ஒத்துக்கொள்ள.. இரட்டை ஆயுள் தண்டனையும் இருபது லட்ச ரூபாய் அபராதமும் அவருக்கு கிடைத்தது. கூடவே அவரோடு இருந்த மற்ற நண்பர்களுக்கும் சேர்த்தே..
கட்டப்பா கண்ணபிரான் முன்னவே வீராவை வாழ்த்தினார். "வெல்டன் மேன்!! ஒரே ஒரு கேஸ் வச்சு மொத்தமா எல்லாரையும் வேரறுத்துட்டியே.. உன்ன மாதிரி ஒரு ஆள் தான் டிபார்ட்மெண்ட்க்கு தேவை!!" என்று கூற.. கண்ணபிரான் விழிவிரித்து அதிர்ச்சியாகி அவரை பார்க்க.. நக்கலாக அவனை ஒரு பார்வை பார்த்த கட்டப்பா, "உன்னை போல காசுக்குதான் விலை போகாதவனை.. நேர்மையானவனை பார்க்கிறது இப்போ எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு!!" என்றார்.
"போலீஸூல சேர்ந்துதான் நல்லது செய்யணும்னு இல்ல சார்.. ஒவ்வொரு குடிமகனும் உள்ளேயும் ஒரு போலீஸ் இருக்கத்தான் செய்கிறான்" என்று கூறிவனை பெருமிதமாக பார்த்தார் கட்டப்பா.
அதன்பின் வீட்டுக்கு வந்தவனை முகம் கொடுத்து பேசாமல் சுற்றிக் கொண்டிருந்தாள் அஸ்திரா.
"என்ன ஆனது இவளுக்கு?" என்று யோசனையோடு இவனும் அவள் செல்லும் இடங்களை எல்லாம் பார்வையாலேயே பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.
இரவு வரை அவன் கையில் சிக்காமல் இவள் சுற்றியதை பார்த்தவன் "பார்த்து.. பார்த்து.. ரொம்ப பண்ணாதடி!! வயித்து பிள்ளைக்காரியின் பார்க்கிறேன். இல்ல அப்பவே தூக்கிட்டு போய் இருப்பேன்" என்று போகிற போக்கில் அவளை சீண்டி விட்டு சென்றான்.
எப்படியும் இரவுக்கு வருவாள் தானே அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்க.. இரவிலும் சமையலறைக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டிருந்தவளை அதட்டி தூக்கிக் கொண்டு வந்தான் தங்கள் அறைக்கு.
"என்னடி ரொம்பதான் பண்ற..??" என்று இவன் கேட்க..
"நீக மட்டும் போய் மாமனாரைப் ஜெயிலுக்குள்ள பாத்துட்டு வந்து இருக்கீக... அப்படி என்ன ரொம்ப பாசப்பயிர வளர்த்தீக அவர்கிட்ட?" என்று இவள் அவனிடம் சண்டையிட..
"என்னதான் இருந்தாலும் யேன் மாமனார் இல்லையா? இவ்வளவு அழகு பொண்ணை பெத்து வளத்து எனக்கே எனக்கா கொடுத்து இருக்காரே.. அந்த ஒரு பாசம் தேன்!!" என்று அவன் கூறிக்கொண்டே கன்னத்தில் கடிக்க.. அவள் கொதித்தெழுந்து அவன் சட்டையை பற்றி உலுக்க..
"விடுடி.. ராடச்சி!! வலிக்குது.. நான் போய் அவரை சந்தித்து பேசலனா அந்தாளு கோர்ட்டுல சஞ்சயன கொன்னத ஒத்துக்கவே மாட்டாரு!!" என்றவனை பார்த்து "அப்படி என்ன பேசினீக?" என்றாள் நெற்றி சுருக்கி..
"உண்மைய பேசினேன்!!" என்றவன் தோளை குலுக்க..
"எனக்கு தெரியாத உண்மை உங்ககிட்ட என்ன இருக்கு?" என்றவனின் கிடுக்கிப்பிடியில் 'ஐயையோ வீரா.. வாயை விட்டுடாத!' என்று தனக்குள் திருதிருத்தவன் "சொல்லுக மாமா.. கேக்குறேன்ல?? எனக்கு தெரியாத உண்ம உங்ககிட்ட என்ன இருக்கு?" என்று விடாக்கண்டியாய் நின்றவளை வாயை அடைத்தான் அவன் வழியில்..
அவள் பிளந்த வாயுடன் அவனுடதை பொருந்தினான். அவளின் மெல்லிய உதட்டையும் பொறுமையற்றவன் போல பல் அழுந்தக் கவ்வி இழுத்து உமிழ் நீர் சுவைப்பு ஓசை மேலிட வெறியுடன் சுவைத்தான். திணறியபடி அவன் உடலுடன் ஒட்டி அவனை இரண்டு கைகளிலும்
தடுத்து நிறுத்த முயல.. முயல மட்டுமே முடிந்தது அவளால்.
அவளின் உதடுகளும் நாக்கும் அவனால் தயக்கமின்றி உறிஞ்சி சுவைக்கப்பட்டன.. ருசிக்கப்பட்டன.. அவனால்!!
"வலிக்குது மாமா.. இப்படியா கடிச்சி வைப்பீக!!" என்று உதட்டை பிதுக்கியவளின் இதழ்களை பார்த்தவன், "முத்தத்துல எத்தன வகை இருக்கு தெரியுமா டி?" என்றான் சரசமாக.. அப்படியா என்று விழித்தவளை..
"முத்தத்தில் பல வகையாம்!!
மென் காதலாய் ஒரு முத்தம்..
வன் காமமாய் ஒரு முத்தம்..
அடங்கா மோகமாய் ஒரு முத்தம்..
ஆவேசமாய் முத்தம்..
ஆற்றாமையாக ஒரு முத்தம்..
சமாளிக்க ஒரு முத்தம்..
சமாதானம் செய்ய ஒரு முத்தம்..
ரசிப்பாய் ஒரு முத்தம்..
ருசிக்காய் ஒரு முத்தம்..
இப்படி பல…" என்ற
வீராவோ ஆவேசமாய் முத்தமளித்தான் தன் இணைக்கு.
"முத்தம் சுவையானது என்பதை விட அதைக் கொடுக்கும் ஆவேசத்தில் கிளர்ந்து எழும் மோகத்தின் உச்ச உணர்ச்சித் தூண்டலே முத்தத்தை சுவையானதாக மாற்றுமாம்..
மென் முத்தத்தில் அது இல்லை. மென் முத்தம் காதலுக்கானது. அதில் அன்பும் பாசமும் மிகுந்திருக்கும். ஆனால் காமத்துக்கானது ஆவேசமாய் கொடுக்கப்படும் வன் முத்தம்தான்!!
உச்ச மோகத்தில் மூச்சிறைக்க கடித்து உறியும்போது வலியுடன் சிக்கிச் சிதைவுறும் உதடுகள் தித்திப்பதை வன் முத்தத்தில் மட்டுமே உணர முடியும்!!
கடிக்கக் கடிக்க சுகம்தான் அதில்!!
அப்போது உடலில் எழும் வலி உணர்ச்சியை விட, உச்சம் நோக்கிச் செல்ல மோகவலை அவர்களை சூழ காதலோடு கூடிய காமம் ஆட்சி செய்கிறது.
அம்மாதிரி கணத்தில் வன் முத்தத்துக்கு மட்டுமே உதடுகள் மீண்டும் மீண்டும் ஏங்குகின்றன. உதடுகள் தீப் பற்றி எரிவது போன்ற வன் முத்தம்!!" என்ளான். அதை உணர்ந்தாள் அஸ்திரா வீராவின் வன் முத்தத்தில்!!
வீரா தன் இரண்டு கைகளிலும் அவளை அள்ளித் தூக்கிய போது சட்டென நிலை மீண்ட தீரா.. திடுக்கிட்டு அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
“மாமா.. என்ன இது.. விடுங்க!! பாப்பா வயித்துல இருக்கு!!" எனச் சிணுங்கியவளை சிறு குழந்தை போல கைகளில் மெத்தையை நோக்கி சென்றான்.
"அதுக்கு என்னடி? நான் யேன் புள்ள கிட்ட சாரி கேட்கிறேன் இரு!!" என்றவன் அவளது முந்தானையை விலக்கி குட்டியாய் சிறு பந்து போல் இருந்த அவளது வயிற்றில் மென்மையாக முத்தம் பதித்து.. "தங்கப்புள்ள.. சமத்தா தூங்குங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வேலை இருக்கு" என்றவனை, அவள் முடியை பிடித்து ஆட்டி "என்ன பேச்சு பேசுறீக மாமா.. புள்ளைகிட்ட!!" என்க..
"அடி இவ வேற.. அவ்வளவு அவசரமா உனக்கு? இருடி யேன் புள்ளைய கொஞ்சிட்டு தான் வருவேன்!!" என்று அவன் சில்மிஷ குரலில் கூற இன்னும் வெறி ஏறியது அவளுக்கு.
அவன் முடியை பிடித்து தன்னை நோக்கி இழுக்க முற்பட.. அவனும் அவளது வயிற்றில் மென்மையாக புதைத்தான்.
அவளின் சின்னத் நாபி குழி.. அழகிய பூனை மயிர் சிலிர்த்து சுழித்திருந்தது. அவள் வயிறு பெருத்திருக்க.. அவை இன்னும் அழகாய் தெரிந்தது.
அதன் கவர்ச்சி அவனின் ஆண்மையைச் சுண்டி இழுத்தது. குனிந்து அவள் நாபியில் முத்தமிட்டான். அவள் கூசிச் சிலிர்த்து மறு கையில் அவன் முகத்தைத் தொட்டாள். அவன் முடியைப் பற்றிய அவள் கை அங்கேயேதான் இருந்தது.
மெல்லிய மீசை முடிகள் குறுகுறுத்து கூசி சிலிர்க்க வைக்க அவள் நாபி குழியையும் அதைச் சுற்றிய மெல்லிடையையும் சத்தம் வர முத்தமிட்டான் வீரா இச் இச் என்று!!
அச்சத்தமே அவளுள் பெரும் உணர்ச்சியை தோற்றுவித்தது.
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்ன மாமா பண்ணிக்கிட்டு இருக்கே?? எனக்கு தெரியாத உண்ம என்ன?" என்று அவன் சிகைக்குள் கையைவிட்டு வருடியவாறே கேட்டாள். அவனோ பதில் சொல்லாமல் மோகத்தில் குழைந்துவரும் அவளது குரலைக் கேட்க பெரும் ஆசை கொண்டவன்,
நாக்கை நீட்டி நுனி நாவால் வருடினான் அவ்விடத்தை.
"மாமா.. மாமாஆஆ" என்று உணர்வுப் பெருக்கில் அவள் சிணுங்க..
இம்முறை பல்லால் மெல்லக் கடித்து சுவைக்க.. அவள் உடல் விதிர்க்க சிறு கூச்ச முனகலுடன் நெளிந்து கொண்டிருந்தாள் படுக்கையில்..
அவன் முத்தங்கள் மெல்லிய சத்தத்துடன் தொடர்ந்தன. அவளின் மெலிந்த இடைப் பரப்பு முழுவதும் அவன் முத்தமிட்டான். அங்கங்கே மெல்லக் கவ்வினான். எச்சில் ஈரத்துடன் நாக்கைச் சுழற்றி சப்பினான். மென்மையாக வயிற்றின் மீது முகத்தைப் புரட்டி மூக்கை நுழைத்து ஆழ மூச்சிழுத்துக் கிறங்கினான்.. மயங்கினான்.. மயக்கினான் மாயவன்!!
சற்று குனிந்து அவள் இடை வளைத்து அணைத்தவன், அவள் நெகிழ்ந்து குழைய அழுத்தமாக அவளின் வெண் கழுத்தில் முத்தமிட்டான். உடல் கூசி அவனைத் தள்ள... அவன் உதடுகள் அவள் கழுத்துப் பரப்பெங்கும் ஆதுரத்துடன் முத்தமிட்டு கொண்டே இருந்தன.. மெல்ல கவ்விச் சப்பின...
மேலிருந்து கோடிழுத்து நெஞ்சப் பரப்பில் அலைந்தன..
இறங்கி மார்பு மத்தியில் மெல்லி முத்தமிட்டன.. வீராவின் ஈர உதடுகள்!!
“மாமா.. மாமா..” எனக் கிறக்கத்துடன் முணகி அவனைத் தழுவிக் கொள்ளத் தவித்தாள் தீரா..
வீராவின் உதடுகளும் நாக்கும் அவளின் நெருக்கமான பிறை நிலவுக்குள் நுழைந்து பெண்மைப் புதையலைத் தேடியது. அவள் மெல்ல மெல்ல அவனின் சிறையிலிருந்த கையால் அவன் முடிகளை பிய்க்க.. குளிர்க் காற்றை மீறிய அவள் தேகத்தின் சூடு அவன் முகத்தில் அறைந்தது.
இடைவிடாத முத்தங்களும்..
இதழ்பிரியா சத்தங்களும்..
அணங்கவளின் சிணுங்கல்களும்..
ஆணவனின் வன் மீறல்களும்..
காதலோடான ஆத்மார்த்த தாம்பத்தியத்தில்..
மோகம் கொஞ்சம்..
காமம் கொஞ்சம்..
மையல் கொஞ்சம்..
கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவாய் நிறைந்தது!!
காதல் ஒருத்தியை கை பிடிப்பது மட்டுமல்ல அவளின் உற்ற நேரங்களில் உடனிருந்து காப்பதே ஆணவனின் வீரம்!!
அவ்வீரமாய் தீராவின் வாழ்வில் என்றும் இருப்பான் வீரா...
பிறக்கப்போகும் இவர்கள் குழந்தை மட்டுமல்ல.. எதிர்காலத்தில் அவ்வூரில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சாதி என்னும் பெயரால் வன்கொடுமை நேராமல்.. கௌரவ கொலைகளில் மாட்டாமல்.. காத்து நிற்பான், சில நேரம் கருப்பண்ணசுவாமியாய்.. சில நேரம் சட்டத்தின் துணை கொண்டு.. வீரநெடுமாற பாண்டியன்!!
இவர்களின் காதல்..
முற்று பெறாத.. முடிவிலியாய்…
தொடரட்டும் அவர்களது வாழ்வில்..
இனி வரும் காலங்களில்!!
சுபம்!!
