காதலி 30

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 30

 

திருமணம் சொர்க்கத்தில் முடிவாகுதாம்!!

ஆனால் எனக்கு என் சொர்க்கதோடு முடிவானது!!"

 

என்று கைவளைவில் இருந்த மனைவியை பார்த்து கூறினான் ஜித்தேந்தர்.

 

திருமணம் அந்தா இந்தா என்று முடிந்து.. மற்ற சடங்கு சாங்கியங்களையும் முடித்து.. மனைவியோடு அப்பீட்டாகி விட்டான் நம் கள்வன்!!

 

"எங்கே..? "எங்க போறிங்க?" என்று யாருக்கும் பதிலளிக்காமல் ஒற்றை சிரிப்பில் கவர்ந்து வந்துவிட்டான் காளையவன் தன் மனம் கவர்ந்த மந்தாகினியை!!

 

காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும் – அங்கு தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் – அங்கு கேணியருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும். பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும் – நல்ல முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும், – என்றன் சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந் தென்றல் வரவேணும். 

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் – எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள் கொண்டுதர வேணும் – அந்தக் காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன் காவலுற வேணும்!!

 

"பாவா.. ஏமி காவாலி?" இதுவரை சுந்தரத் தெலுங்கில் நன்றாக தானே பேசிக் கொண்டிருந்தான்.. என்ன திடீரென்று புரியாத பாஷையில் ஏதோ பிதற்றுகிறானே என்று அவள் பார்க்க..

 

"என்ன பால் டப்பா.. எங்க செந்தமிழ் எப்படி இருக்கு?" என்று கேட்க..

 

"என்னது உங்க செந்தமிழா?? அப்போ.. நீ தெலுங்கு இல்லையா பாவா??" என்றாள்.. அதில் துளி வருத்தம் இருக்க..

 

"பாஷை தேவையில்லை..

வாழும் காலம் வரை..

பாவை பார்வை மொழி போதுமே!!"

என்று மீண்டும்‌ தமிழில் பாட..

 

"பாவா…!!" என்று சிணுங்கினாள் பெண்!!

 

"முதல்ல நம்மை பத்தி சொல்லிடுறேன்!!" என்றவன், தங்கள் பூர்வ ஜென்ம கதையை சொன்னான். சொல்லி முடித்ததும் தன் மன்னவனை இறுக்க கட்டிக் கொண்டாள் மங்கை. 

 

"நான் எவ்வளவு கெட்ட பொண்ணு இல்ல பாவா?? பாவா நீ எனக்காக பார்த்து பார்த்து செஞ்சிருக்க.. ஆனா.. நான் என்ன பண்ணி இருக்கேன் உன்னை.. கஷ்டப்படுத்தியிருக்கேன்.. உன் காதலை துச்சப்படுத்தி இருக்கேன்.. நீ எவ்வளவு மனசு ஒடிஞ்சு போய்ருப்ப பாவா.. சாரி.. சாரி.. பாவா!!" என்றவள் கதற..

 

"ஹேய்.. பால் டப்பா!! விடுடி.. விடுடி.. எல்லாம் சரியாகிடுச்சு தானே!! நீ இப்படி அழுதுகிட்டே இருக்கறதுக்காகவா யார் கேட்டதுக்கும் பதில் சொல்லாம உன்னை இங்க தூக்கிட்டு வந்தேன்!!" என்று அந்த இடத்தை காட்ட..

 

"ஆமா.. பாவா!! இது ஏற்கனவே நாம வந்து இருந்த இடம் தானே!!" என்று அந்த வீட்டை கேட்க..

 

"ஆமாம்.. நான் முன்னால கள்வனா இருந்தப்போ இருந்த அதே காடு மலை தான். எப்போ எனக்கு எல்லாம் ஞாபகம் வந்ததோ.. அப்பவே இந்த இடத்தை எனக்கு சொந்தமாக்கி.. நமக்காக ஒரு குட்டி அரண்மனை கட்டினேன். எப்படி இருக்கு?? பிடிச்சிருக்கா?"

 

"நீ இருக்கும் இடம் எதுவானாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பாவா.. அது நாம் முன்னே இருந்த அந்த குட்டி வீடா இருந்தாலுமே!!" என்றாள் மன்னவன் தோளோடு கட்டிக் கொண்டு..

 

அவளின் அண்மையில் அவனது மனதும், உடம்பும் மெல்ல மெல்ல மோகம் கொள்ள… இளமை நரம்புகள் சூடாகி பரவி விரவி ஆண்மை விழித்துக் கொள்ள.. ஆனாலும் அவளை எதுவும் செய்யாமல், அவளைக் கட்டிப்பிடித்தப்படி சிறிது நேரம் அமைதியாகப் படுத்திருந்தான் அந்த மொட்டை மாடியில் அந்த நேர தனிமையை அனுபவித்தப்படி!!

 

இறுக்கி அணைத்தவன் அதன் பின் அமைதியாக விட.. அவளோ யோசனையோடு..

 

"பாவா.. ஆர் யூ ஓகே?" என்றாள்.

 

"ஏன்டி?" 

 

"உன் கையும் காலும்.. கூடவே உதடும் இவ்வளோ அமைதியா இருக்கே?" என்றாள் குறும்போடு!!

 

"வாயாடி!!"

 

"என்ன வாயாடினேனாம்!!"

 

"நான் வாயாடமா இருக்கேன்ல.. அது தான் காரணம்!!" என்றான் நமட்டு சிரிப்போடு!!

 

"புரியல பாவா??"

 

"கிஸ்ஸிங்.. டச்சிங்.. லிப்பிங்.. பண்ணாம இருக்கேன்ல.. அதான் ரொம்ப பேசுற"

 

"வேணும்னா பண்ணிக்கோ.. நானா உன்னை தடுத்தேன்?"

 

"ம்ம்ம்.. அதோடு மட்டும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. அதான் யோசிக்கிறேன்..?" என்றான்.

 

"ரொம்பத்தான் யோசிக்கிற புதுசா பண்ற மாதிரி.. நான் எனக்காக கேட்கல. உனக்காக தான் கேட்டேன். வேணாம்னா போ?"

 

"ம்ம்ம்.. தேறிட்ட பால் டப்பா!!" அவள் மீது அவனின் மோக தாபங்கள் துளிர்விட.. ஆண்மை முறுக்குப் பெற.. அவள் மென்மைகள் அவன் நெஞ்சில் அழுந்த அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவள் கன்னத்தில் மூக்கை உரசியபடி கேட்டான். 

"ஏன்டி ட்ரஸ் மாத்தல?" இன்னும் கல்யாண புடவையில் தான் இருந்தாள்.

 

"இன்னைக்கு இதுல தான் இருக்கனுமாம் பாவா?" என்றாள் வெட்கத்தோடு!!

 

"ஆஹான்.. ஆனாலும் புடவையில் பார்க்க இன்னும் அழகா தான்டி இருக்க பால் டப்பா!!" என்றான் கன்னத்தோடு கன்னம் இழைத்து..

 

"அப்ப.. மத்த ட்ரஸ்ல நான் அழகா இல்லையா பாவா?" என்றாள் சிணுங்கலோடு!!

 

"எப்படி பார்த்தாலும் நீ அம்சமா அழகா தான்டி இருப்ப... ஆனா நான் இப்ப சொன்னதோட மீனிங் வேற.. அது.." என்றவன் அவள் காது மடல் கவ்வ..

 

"என்ன மீனிங்ல சொன்ன? சொல்லு பாவா!!"

 

"ட்ரஸே இல்லாம நீ இன்னும்..."

 

"திருட்டு பாவா!!" என்று‌ அவன் வாயை பொத்தினாள். அவளின் ஈர உதடுகள் அவன் உதடுகளை ஸ்பரிசிக்கும் தூரத்தில்... அவளின் சூடான மூச்சுக் காற்றை முகத்தில் உரச.. அவள் கன்னங்களை தாங்கி அவளின் மெல்லிய இதழைக் கவ்வினான். அவள் இதழ்களை கவ்வி இழுத்தவன் தன இதழ்களுக்குள் பொதித்துக் கொள்ள... அதி மோகமோ.. பெரும் தாபமோ காட்டவில்லை. வெறும் மென்மையாகச் சுவைத்தல் மட்டுமே!! ஆம்!! ஆழ்ந்து சுவைத்தான்!!

 

வாஹினியின் மூச்சு வேகமாகி.. அதிர்வான இதயத் துடிப்பை தன் நெஞ்சில் உணர்ந்தான். அவள் தோளினை வருடியபடி மெல்லக் கேட்டான். 

 

"ஏன்டி என்கிட்ட ஒன்னுமே கேட்கல?"

 

"என்ன பாவா கேட்கனும்??"

 

"உன்னை‌ ஏன் தூக்கினேன்? ஏன் சிறை வைத்தேன்? ஏன் திருடனா நடித்தேன்?? ஏன்?? ஏன்?? எவ்வளோ ஏன் இருக்கு?? அதுல ஒரு ஏன் கூட கேட்கல நீ??"

 

"கேட்க தோணல பாவா.. சொல்றதா இருந்தா நீயே சொல்லுவ.. அதிலும் நம் பூர்வ ஜென்ம்ததை நீ சொல்லும் போதே சில விஷயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது!!" என்றாள்.

 

"நிஜமாவா டி? என் ஹிமா!!" என்றவன், மீண்டும் அவள் உதட்டைக் கவ்விச் சுவைத்தான். கண்களை மூடி முத்தத்தில் கிறங்கி அவன் முதுகை இறுக்கினாள். அவளின் இறுக்கம் பலமாக இருப்பதை உணர்ந்து லேசாக வியந்தவன், இன்னும் இன்னும் இறுக்கி கொண்டான் இதழ்களை!!

 

இந்த முறை இன்னும் ஆழமாக அழுத்தமாக முத்தமிட்டு இதழ்களைப் பிரித்தான். இதழ்களால் அவள் மூக்கில் தேய்த்து.. கன்னக் கதுப்பில் கோலமிட்டு.. நெற்றியில் உலா வந்து.. இதழில் இளைப்பாறியது. அவள் முதுகில் தொடங்கிய அவன் விரல் ஊர்வலத்தில் அவள் நெளிந்தபடி அவன் அணைப்பில் கட்டுண்டு கிறங்கிக் கிடந்தாள்.

 

மெல்ல மெல்ல அவன் முகம் அவள் கழுத்துக்கு இறங்கியது. அச்சங்கு கழுத்தில் முத்தமிட்டு மெல்ல கடித்தான். வாஹினியோ உச்சகட்ட தவிப்பை அடைய... அவள் தேகமோ அவனின் தீண்டலில் தாப உணர்ச்சியின் தீவிரத்தை தாங்க முடியாது, பாம்பைப் போல நெளிந்தவள் அவனையும் அவளோடு பின்னி பிணைத்துக் கொண்டாள்.

 

இப்போது அவன் முகம் அவளின் கழுத்துக்கு கீழே இறங்கியது. மலை முகடுகளில் முத்தமிட்டு விளையாடும் மேகங்களை போல.. அவனது இதழ்களும் அவ்விடத்தில் விளையாடி உறவாடியது.. 

 

அவனிரு முரட்டு கைகளும் அவளது கொங்கைகளின் நீள அகலங்களை அளவெடுக்க.. அவள் சட்டென வெட்கி புரண்டு படுத்து, மூச்சு வாங்கினாள். 

 

கள்வனோ சில நொடிகள் நிதானித்தான். பின்னர் மெல்ல அவளை அணைத்து அவள் இடுப்பை தடவியப்படி.. முகத்தை மேலே கொண்டு போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். 

 

"என்னடி ஆச்சு?"

 

"ஒண்ணுமில்ல!!" என்று தலையாட்டினாள்.

 

"வேணாவா?"

 

"ம்ம்ம்"

 

"பிடிக்கலையா?? பிடிச்சிருக்கா?"

 

"ம்ம்ம் "

 

"முன்னேறவா?"

 

"ம்ம்ம்"

 

"சொல்லுடி?"

 

"ம்ம்ம்"

 

"பேசுடி?"

 

"ம்ம்ம்.."

 

"பயமா?"

 

"ம்கூம்"

 

அவள் கன்னத்தை கவ்வியவன், மெதுவாக கடித்து சப்பியபடி அவள் புடவையை மெல்ல விலக்க.. அவள் ஆலிலை வயிற்றின் அழகிய தரிசனம்.. மெல்ல வருடி நாபியை நிரடினான். அவளோ கூச்சத்தில் நெளிய, அவள் நாபிக் குழியில் ஒற்றை விரலால் கோலமிட்டு, அவள் வயிற்று முழுவதுமாக விரலால் வருட.. மேகனை அவளோ மொத்தமாக மோகனத்தின் பிடியில்…

 

கையை மேலே கொண்டு வந்தவன், முந்தாணையை மொத்தமாக விலக்கி மலை முகடுகளாக நிமிர்ந்து நிற்கும் மென்மைகளை கண்டு அதில் தன்னை புதைத்துக் கொண்டான். லேசான வியர்வை வழியத் துவங்கியிருந்த அவள் உடலின் வாசத்தை ஸ்பரிசத்தை நுகர்ந்தபடி இதழ்களால் அவள் தேகத்தை அர்சித்தான்.

 

அவன் இதழ் அர்ச்சனையில்.. இன்றுவரை உணர்ந்திராத ஒரு இன்பச் சிலிர்ப்புடன் அவளின் பெண்மை சிணுங்கியது. தன்னையும் மீறி மெல்ல முனகியபடி அவன் தலை முடியை இறுக்கிப் பிடித்து அவன் தலைமுடியில் தன் விரல்களால் அலைந்தாள், அவ்வப்போது அந்தப் பிடி இறுக்கமாகவும்.. இளக்கமாகவும் அவளுள் அவனை புதைத்தது.

 

கண்களை இறுக்கி மூடிக் கொண்டு உடல் வெட்டிச் சிலிர்த்தவள் வியர்த்து ஒழுக.. வேகமாக மூச்சு வாங்கினாள். அவளின் அங்கங்களை சுவைத்த பின் முகத்தை உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் மூடியிருந்தன. அவனின் கையை 

மெதுவாக ஆலிங்கனத்திற்கு தடையாய் இருந்த ஆடைகளை களைய.. அவள் கை சட்டென பதறி வந்து அவன் கையைத் தடுத்தது. 

 

"ஏன்டி.. பால் டப்பா?" 

 

"ம்ம்ம் "

 

"ஹிமா?"

 

"ம்ம்ம் "

 

"வேண்டாமா?"

 

"ம்ம்ம்."

 

"இனி.. ம்ம்ம் போடுவ??" என்றவன் அவளின் இதழ்களை விழுங்கினான்.

 

மூச்சு முட்டி வாயை பிரித்தனர் இருவரும். மங்கை கிறங்கியிருந்தாள் மன்னவன் ஆலாபனையில்.. அவளை சரித்து கீழே படுக்க வைத்தவன், அவள் மீது படர்ந்தான்.

 

கள்வனின் காதலி இப்போது அவனது மனைவியாய் முழுமையடைந்தாள்.

 

ஏகாந்த இரவு..

மிளிரும் பௌர்ணமி நிலவு…

சலசலக்கும் மரங்கள்..

குளுகுளுவென ஈர காற்று..

இதயம் விரும்பும் இனியவள்..

இதுவரை அனுபவித்திராத இனிமை!! கூடவே தனிமை!!

 

அவனின் அதரங்கள் தீண்ட தீண்ட தீயின் தகிப்பை சுகித்து ஓராயிரம் முறை சிலிர்த்து மலர்ந்தாள் பெண். அவனின் ஆண்மை தேடலை துவக்கினான் அவளது பெண்மையில்.. மென்மையாக தொடங்கி அவளது இடையை வன்மையாக பற்றி அசைந்திட.. மோகனமாய் மெல்லிசை சிணுங்கியவள் அவனின் அதிரடியில் குரல் தாபமாய் மாறி பின் பேச்சுகள் இன்றி வெறும் மூச்சுக்களே பேச்சுகளாய்!!

 

இருவரின் மூச்சு காற்றும் அவர்கள் தேகம் போல பின்னி பிணைய, மோகத்தீ இன்னும் பற்றி எரிய, அந்தகார இருளில் இவர்களின் இந்த காதல் களியாட்டத்தை பார்த்து நாணமுற்ற நிலவவள் மேகத்தில் முகம் மறைத்தாள்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top