Share:
Notifications
Clear all

இஞ்சி இடுப்பழகி 29

 

Gowrimathu
(@gowrimathu)
Member Moderator
Joined: 3 months ago
Messages: 33
Thread starter  

மனிஷா ஏசியில் தூங்கிபழகியவளால் பேன் காற்றில் தூங்கவே முடியவில்லை 

ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்டாள் 

என்ன செய்வதென்று யோசித்தவள் வெறும் ஜிம்மிஸ் முட்டிகால் வரை சர்ட்ஸ் மட்டும் போட்டு தூங்குவாள் 

அதுதான் அந்த பேனுகாற்றுக்கு தூங்குவதற்கு ஏதுவாக இருந்தது கதவுமூடிட்டுதானே  தூங்குறோம் யார் உள்ளவரபோறாங்க அலட்சியம்தான் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டுதான் படுப்பாள் அதனால் தான் சுதந்திரமாக படுத்திருந்தாள்

 

இந்தநேரத்தில் அந்த வீடு உள்பக்கம் பூட்டியிருக்கும் என்று அழகருக்கு தெரியாமலா  இருக்கும் அந்தவீட்டின்  கொத்துசாவி இரண்டில் ஒன்றைத்தான் அவர்களிடம் கொடுத்திருந்தான் 

இன்னொன்று இவர்கள் வீட்டுசாவியோடு  இருந்தது அதை எடுத்துக்கொண்டவன் திருட்டுத்தனமாக வெளியேறி  கதவை திறந்து மண்டிபோட்டு பூனைபோல் தவழுந்து உள்ளேபோனான் 

 

 

பாட்டி அழகி ஹாலில்  படுத்திருப்பதால் நடந்துசெல்லகூட பயம் முழங்கால் போட்டே பூனைபோல் தவழ்ந்துகொண்டு செல்ல பாட்டி சட்டென அசைந்ததும் அவருக்கு அருகிலேயே குப்புற படுத்துகொண்டான் பாட்டி புரண்டுபடுத்தது

பாட்டியான் கால்  அழகர் முதுகில் தொப்பெ விழுக கத்தபோனவன் வாயை மூடிக்கொண்டு பாட்டி அசைக்காதவாறு காலை எடுத்து விட்டு தவழ்ந்துவந்தான்

அந்தநேரம் தான் சூர்யாவும் எழுந்து வெளியே வர அய்யய்யோ பாத்ரூம்போறானோ   என்னமோ வேகமாக தவழ்ந்துபோனவன் உள்ளேயிருக்கும் சமையலறை ஸ்லாப்புக்குள் நுழைந்துகொண்டான்

சூர்யா வெளியேபோனதும் அவனை எட்டி  பார்த்துவிட்டு வேகமாக வந்தவன் மனிஷா அறைகதவை திறந்து மூச்சுவாங்க உள்ளேவந்தவனே அவள் படுத்திருக்கும் கோலத்தை பார்த்து எச்சில்  விழுங்கியவன் பிடித்துவைத்து பிள்ளையார்போல் அதிர்ந்து நின்று விட்டான்

 

 

ஏதோ பேசவேண்டுமென்று வந்தவன் அவளை எழுப்பாமலயே அவளுக்குஅருகில் அமர்ந்து படுத்திருந்த தங்கசிலையை ரசித்துக்கொண்டிருந்தான் 

உள்ளாடை இன்றி அவள் அழகுகள் ஜிம்மிஸ்க்குள் சுதந்திரமாக இருந்தது 

நெஞ்சுகுழி அழகில் அவள்மேல் பித்தாகி அந்த குழிக்குள் விழுந்துவிட்டான்

எந்த பெண்ணையும் இந்த நிலையில் பார்த்ததில்லை 

அவனுக்கு தெரிந்ததெல்லாம் வெட்டுகுத்துதான்

பெண்சிலையை இப்போதுதான் இரண்டாவது முறையாக பார்க்கிறான் முதல்முறை பம்புசெட்டில் பார்த்தது அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறான்

வாயில் எச்சில் சுரந்தது 

அடிவயிறு பசியில் எழுந்தது 

 

 

அருகில் படுத்தவன் உதட்டை ஈரபடுத்திகொண்டான் நெற்றியிலிருந்து ஒற்றைவிரலால் வருடிகொண்டே வந்தவன் 

நெஞ்சில் ஐந்துவிரலையும் ஒருமுறை பார்த்துவிட்டு 

கையை கீழ்நோக்கி இறக்க அவளுக்கோ கொஞ்சம்கொஞ்சம் தூக்கம்குறைந்து கண் திறந்து பார்த்தவள் அருகிலிருந்த அழுகரை பார்த்ததும் அதிர்ந்துபோய் பதறிப்போய் எழுந்து நின்றாள் 

 

கட்டில் மெத்தையெல்லாம் இல்லை கீழே மெத்தையைபோட்டுதான் படுக்கவேண்டும் 

பதறிபோனவளோ கதவு எப்படி திறந்திருக்கும் என்று அதிர்ச்சியில் பார்த்தாள் 

இவன் வீடல்லவா எப்படியாவது வந்திருப்பான் அவன் வீடாக இருந்தால் அனுமதிகேட்காமல் வரலாமா கோவம்தான் வந்தது

அதிலும் அவன் கண்கள் வேறுஒரு கதை கூற சுதாரித்துக் கொண்டவள் அருகில் வந்தவனை தள்ளி நிற்க வைத்தாள் 

 

 

அவனை தடுத்து நெஞ்சில் கைவைத்து தள்ளிநிறுத்த

அவனோ கிறக்கத்தோடு அவள் கையை பிடித்து தன் முகம் கழுத்தில் வருட வெடுக்கென பிடுங்கினாள்

 

அர்த்த ராத்திரியில் என்னபழக்கம் இது 

என் ரூம்க்குள்ள எதுக்குவந்தீங்க 

உங்க வீடா இருந்தா உங்க இஷ்டத்துக்கு வருவீங்களா எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கல அவள் கோபமாக பேச சுதாரித்துக்கொண்டான் 

 

 

சாரி மணி நான் ..ஏதோ... எனக்கே தெரியாம பண்ணிட்டேன் ப்ளீஸ் சாரி அவளை நெருங்க அவளோ விலகினாள்

 

இப்ப எதுக்காக இங்கவந்துருக்கீங்க தெரிஞ்சுக்கலாமா

 

 

அது வந்து...இல்ல...

நீ முன்னாடி மாதிரி என்கிட்ட பேசுறதில்ல அதான் என்னன்னு கேட்டுட்டு போகலாம் வந்தேன் 

 

 

முன்னாடி மாதிரினா  எப்படிபேசணும் எப்பவும்போலதானே பேசுறேன் 

நீங்க  பேசுனா பதில்சொல்லுவேன் அவ்வளவுதான் அதையும்தாண்டி பேசுறதுக்கு எதுவும் இல்லையே

அலட்சியமாக அவள் கூற சந்தேகமாக அவளைபார்த்தான்

 

மணி நீ வேணும்னே பண்ற நான் உன்னை விரும்புறேன்  

 

ஐ ம் சாரி எனக்கு அந்தநினைப்பு இல்லை நான் பிரண்டாதான் உங்ககூட பேசினேன் பழகினேன் நீங்க இப்படி நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் அவள்கூறியதும் அதிர்ந்துபோனான் 

இவளுக்கு என்னாச்சு அப்பாகிட்ட பேச சொல்லி என்னைடார்ச்சர் பண்ணிட்டு இருந்தாளே இப்போ எதுவும் நடக்காதமாதிரி பேசிட்டுஇருக்கா

ஏய் மணி உனக்கு என்னாச்சு ஏன் இப்படி பேசுற

 

 

எனக்கு எதுவும் அகல நான்நல்லாத்தான் இருக்கேன் உங்களுக்குத்தான் ஏதோஆயிடுச்சு வீட்ல மேரேஜ்பத்தி பேசி முடிவு பண்ணபிறகு இன்னொரு பொண்ணுகிட்ட வந்து அத்துமீறிட்டு இருக்கீங்க இதுஎவ்வளவு பெரிய தப்பு புரியுதா இல்லையா

அது மட்டும் இல்லை அருந்ததி உங்களை விரும்பிட்டு இருக்கா 

இப்போ இருந்து இல்ல அவசின்ன வயசுல இருந்து உங்களை விரும்பிகிட்டு இருக்கா உங்களுக்கு ஏத்த பொண்ணுதான்

 

 

வேணாம்  மனி இப்படி பேசாத என் மனசுல என்னஇருக்குன்னு தெரிஞ்சுட்டேநீ  பேசிட்டுஇருக்க அருந்ததிமேல பாசம் இருக்கே தவிர அவளைநான் விரும்பல

ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மறுபடியும் அவளைநெருங்க அவள் விலகினாள்

 

 

ஓஓஓ என்னை விரும்புறத உங்கப்பா கிட்ட  நேரடியா சொல்லிருக்கலாமே 

இவ்வளவு நாள் ஏன்சொல்லல இப்பகூட உங்கப்பா அம்மாவுக்கு தெரியாம தானே திருட்டுத்தனமா வந்துருக்கீங்க நேரடியா பேசவே அவ்வளவு பயம் உங்களுக்கெல்லாம் இந்த காதலே தேவையில்லை 

 

 

இப்ப என்னடி பிரச்சனை உனக்கு 

என் அப்பாகிட்ட பேசாதது ஒன்னுதான் உனக்குபிரச்சனையா நாளைக்கு காலைல நான்பேசுறேன் போதுமா

அவர் வேணாம் சொன்னாலும் உன்னை நான் விடமாட்டேன் வீட்டை எதிர்த்து வந்தாவது உன் கழுத்தில் தாலிகட்டுவேன் 

நீ எனக்கு வேணும் அவன்உறுதியாக கூற மனிஷா அதிர்ந்தாலும் அசரவில்லை 

  இரண்டு உயிர்களோடு விளையாடுவதில் அவளுக்கு விருப்பமில்லை

 

 

ஐ அம் சோ சாரி உங்கப்பாவே சம்மதித்தாலும் உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை

 

உன்னோட விருப்பம் எனக்குதேவையில்லை எனக்கு உன்னைபிடிச்சிருக்கு அவ்வளவுதான்

உனக்கு பிடிக்காட்டியும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் விடாபிடியாக கூற  அவளால்தான் சமாளிக்க முடியவில்லை 

 

 

ஓகே உங்கத்தை வந்துருக்காங்களே அவங்களபத்தி என்னநினைக்கிற

 

 

அவங்களைபத்தி பேசுறதுக்கு எதுவுமில்லை அவங்களை எப்பவும் எனக்கு பிடிக்காது 

  இப்போ நான் அமைதியா இருக்க காரணம் பாட்டிக்காக மட்டும்தான் 

அவங்களை  எதுக்கு தேவைரில்லாம இழுத்து  பேசிட்டுஇருக்க

 

 

காரணம் இருக்கே உங்க அத்தை  பொண்ணு உங்களுக்கு விரும்பினா என்ன பண்ணுவீங்க

 

 

லூசா நீ அந்த குடும்பத்தையே வெறுத்துட்டு இருக்கேன் அவங்கபொண்ண  எனக்குஎப்படி பிடிக்கும் அவஎன்மேல உயிரையே வச்சு எனக்காக உயிரைகொடுத்தாலும் அவ எனக்கு தேவையில்லை 

வீட்டைவிட்டு  ஓடிப்போய் என்குடும்பத்தை அசிங்கப்படுத்துன என்னோட அத்தையையும்  அவங்க வாரிசுங்க யாரையும் நான்ஏத்துக்கமாட்டேன் உறுதியாக கூற 

சிரித்தாள் மனிஷ்

 

அப்போ உங்கத்தைமாதிரி நீங்களும் மேரேஜ் பன்னிக்கபோறிங்க அதுமட்டும் சரியா 

 

அவங்களமாதிரி ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என் அப்பா முன்னாடியே தாலி கட்டி அவங்க முன்னாடிதான் வாழ்வேன் 

 

ஓகே உங்க குடும்பத்தை அசிங்கப்படுத்தின அத்தையைபிடிக்காது அவங்ககுடும்பத்தை பிடிக்காது அவங்க பெத்தபொண்ணமட்டும் புடிக்குமா சிரித்தவாறு கேட்க அழகருக்கோ  ஒன்றும் புரியவில்லை 

 

என்ன சொல்ற நீ ??! நான் எப்போ பிடிக்கும் சொன்னேன் லூசுமாதிரி உளறாத

 

 

என்னோட மாமி வேற யாருமில்ல உங்களோட வெறுப்புக்கு காரணமான அழகிதான் என்னை பெத்த மம்மி 

அவங்க ஃபேமிலிய நெனச்சு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தாங்க என்னோட மம்மிய  அவங்க பேமிலி கூட சேர்த்து வைக்கிறதுக்காகத்தான் டிராமா பண்ணி உங்ககூட பிரண்ட்ஷிப் வச்சு 

உங்களை வச்சே உங்க வீடுவரைக்கும் வந்தேன் நான் நெனச்சமாதிரி என்னோட மம்மிய அவங்கவீட்டுக்கு வரவச்சுட்டேன் 

எதுக்காக வந்தேனோ வந்தவேல முடிஞ்சிருச்சு சலணமில்லாமல் கூறியவளை அதிர்ந்துபோய் பார்த்தான் அழகர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை அவள்சொன்னதை நம்பவுமில்லை 

 

 

நான் உன்னை வெறுக்கணும்னு பொய்சொல்லிட்டு இருக்கியா நம்பிக்கையில்லாமல் கேட்டான் 

 

பொய் சொல்ல வேண்டியஅவசியமில்லை

இங்க இருக்குறது என்னோட பேமிலி சூர்யா என் முதல் அண்ணன் 

தன் மொபைலை எடுத்தவள்  அம்மா அப்பா அண்ணன்களோடு எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை அவனிடம்காட்டினாள் 

 

 

திஸ் மை ஹவுஸ் மை மாம்டேட் 

ஆதாரத்தோடு நிரூபிக்க அழகரால் நம்பவேமுடியவில்லை கால்கள் பின்னோக்கி நடந்துபோய் சுவரில்மோதி நின்றான் 

 

 

ஐம் சாரி அழகர் நான்யாருன்னு தெரிஞ்சா என்கூட பேச மாட்டீங்க பழகமாட்டீங்க உங்கவீட்டுக்குவர முடியாது அதனாலதான் என்னைபத்தி எதுவும் சொல்லாம உங்ககூட பிரண்ட்ஷிப் வச்சுக்கிட்டேன்

எல்லாம் என் மம்மிக்காக 

என் மம்மி அவங்க மம்மிகூட சேர்த்துவைக்கதான் இவ்வளவு ட்ராமா பன்னேன் அவ்வளவுதான்

இடையில்  உங்களுக்கு   சலனமாகிருச்சு 

நோ ப்ராப்ளம்  உங்களுக்கு மேரேஜ் ஆகிட்டா எல்லாம்சரியாயிடும் 

இந்த உண்மையை நீங்க உங்கப்பாகிட்ட சொன்னாலும் நான் கவலைப்படமாட்டேன் அதனால பாதிக்கபடபோறது உன்னோட பாட்டிதான் என்னோட மம்மிய இங்க வரவைக்கனும் நினைச்சேனேதவிர உங்கபேமிலிய பத்தி எனக்கு எந்த அக்கறையும் கவலையும்கிடையாது உண்மை அவங்களுக்கு தெரிஞ்சா 

உங்க டாடி என் மம்மியோட  ஃபைட் பன்னுவாங்க  மறுபடியும் வீட்டை விட்டுவிட்டு வெளியே அனுப்புனா

அதனால பாதிக்கப்படபோறது உன்னோட  கிரான்மாதான் 

சோ  உங்க வீட்ல  சொல்லணுமா வேணாமானு நீங்களே முடிவுபன்னிக்கோங்க 

உண்மையெல்லாம் சொல்லிட்டேன் 

இப்போ சொல்லுங்க என்மேல இப்போ லவ் வருதா 

என்னை விரும்புறிங்களோ உன டேட்கிட்ட தைரியமா சொல்லிருவியோ ம்ம் சொல்லு 

உங்களுக்கு ஒரு மேரேஜ் தான் லைஃப்

எங்களுக்கு அது தேவையே இல்ல 

பிடிச்சா என்ஜாய் பன்னிப்போம் 

பிடிக்காட்டி பிரேக்கப் பன்னிப்போம் தட்ஸ் ஆல் 

யூ மீ லவ் ஓகே நம்ம லிவிங்டூகெதர்ல இருக்கலாம் நமக்குள்ள எல்லாம் செட் ஆனா மேரேஜ் பன்னிக்கலாம்

இல்லாட்டி பிரேக்கப் ஓகே அக்மார்க் வெளிநாட்டுகாரியாக பேச உறைந்துபோனான் அழகர்

 

இவளை காதலிப்பது அப்பாவுக்கு தெரிந்தால் தன்னையும் ஒதுக்கிவைத்துவிடுவாரே 

ஆத்திரத்தில் ஒதுக்கிவிட்டு தன்னை நினைத்தே இறந்துவிடுவாரே 

அத்தையோடு சண்டைபோட்டால் சேர்ந்தகுடும்பம் மறுபடியும் பிரிந்துவிடுமே  பாட்டிக்கு ஏதாவது ஆனால் அப்பா தாத்தா தாங்கிகொள்ளமுடியாதே 

இவளை பற்றி எப்படிசொல்வான் 

யாரோ ஒருவரின் மகளாக இருப்பாள் பேசிசமாளிக்கலாமென நினைத்தவன் தலையில்  இடியை போட்டுவிட்டாளே 

எப்படி தாங்குவான் 

அதைவிட நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றிவிட்டாள் கூடவே இருந்து குழிபறித்து அவள் குடும்பத்தை தன் மூலம் கொண்டு வந்திருக்கிறாளே என்று ஆத்திரமும் வந்தது

 

ஏண்டி இப்படி செஞ்ச உன்னைஎவ்வளவு நம்பினேன் உன் மேல உயிரையே வைச்சுருந்தேன் துரோகி நான்யாருன்னு தெரிஞ்சானே கூடவே இருந்து குழிபறிச்சிட்டியேடி ஆத்திரத்தில் அறைந்தான் 

என் குணம் பழக்கவழக்கம் தெரிஞ்சே என்கிட்ட லிவிங்ல இருக்கலாமானு கூப்புடுறியே என்னை புடிக்காட்டி அடுத்து எவன்கூடவேணாலும் போவியா மறுபடியும் அறைந்தான்

 

லுக் அழகு  அடிச்சா நானும் அடிப்பேன் 

ஆரம்பத்திலேயே

என்னைபத்தி சொல்லிருந்தா உங்ககூட பேசிருக்கமுடியாது

இதோ இப்போமாதிரி பேமிலியை சேர்த்துருக்கமுடியாது 

லுக் 

எந்த நம்பிக்கையும் கொடுத்து உங்களை நான் ஏமாத்தல ஜஸ்ட்  ஃப்ரெண்ட் அவ்வளவுதான் நீங்களே நினைச்சு  விரும்பினதுக்கு நான் எதுவும் செய்யமுடியாது பிடிச்சா லிவிங் இதெல்லாம் சகஜம் தோளைகுலுக்கினாள்

 

 

ஆத்திரமாக அவளைபார்த்தான்  வெட்டிகூறுபோடுமளவுக்கு ஆத்திரம் 

ஏண்டி நீ ஒண்ணும் பன்னலயா என்மனசை கெடுக்கலயா பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன செஞ்சேன்னுகேக்குறியா துரோகி 

நீ யாருனு  சொல்லியிருந்தாலும் கூட என்அப்பாகிட்ட எப்படியாவது பேசி இரண்டுகுடும்பத்தையும் ஒன்னும் சேர்த்துருப்பேன் ஆனா கூடவே இருந்து குழிபறிச்சிட்டியேடி 

என் அப்பாவே சம்மதித்தாலும் உன்னை நான்ஏத்துக்கமாட்டேன்

உன் கண்ணுமுன்னாடியே அருந்ததிக்கு தாலிகட்டி அவகூட சேந்து வாழ்வேண்டி பாத்து வயிறெறிசுஞ்சு சாவுடி

அவளை தள்ளிவிட்டு வெளியேறினான் 

 

அவன் போய்விட்டான் 

கதவைபூட்டி சாவியை  எடுத்துக்கொண்டவள் சோர்ந்துபோனவளாக தூக்கியெறிந்துவிட்டு வாயைமூடிக்கொண்டு அழுதுதீர்த்தாள் 

அருந்ததி அழகு திருமணம் நடக்க வேண்டுமென்றால் அவன் வெறுக்குமாறு செய்யவேண்டும் என்றுதான் அவள் யார் என்பதை கூறி வெறுக்கவைத்தாள்

அவனும் வெறுத்துவிட்டான்......

 

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top