உயிரே 1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

1

 

 

இருள் பிரியாத அதிகாலை நேரம்.. 

இன்னும் தூக்கத்தில் இருந்து தன் கண்களை பிரிக்க முடியவில்லை அவளால்.. கண்களோ கனல் கங்குகளாக எரிந்தது. சற்று உடம்பை நெளித்து திரும்பி படுக்க முயன்றாள். ஆனால் உடலின் ஒவ்வொரு பகுதியும் அசதியில் எங்களுக்கு ஓய்வு கொடேன்‌ என்று கெஞ்சியது. ஆனாலும் கண்களை மெல்ல பிரித்து அறையின் மேலே இருந்த ஜன்னல் வழியாக வானத்தை பார்க்க.. அங்கு இன்னும் விடியாமல் கருக்கலில் தான் இருந்தது. என் வாழ்க்கையும் இப்படித்தான் காரிருளில் இருக்கிறது என்று வெதும்பிய பாவை கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

 

விடியலுக்கு முன் இருக்கும் இருள் காரிருளாகயிருக்கும். அதையே கருக்கல் என்போம். ஆனால் கருக்கல் வந்தாலே அடுத்து விடியல் என்பது தானே!!

 

ஏனோ பெண்ணவளுக்கோ அது புரியவில்லை!!

 

அவள் அஸ்திரா!!

 

கண்களை மூடினாலும் அவள் கண்களுக்கு நேற்று நடந்தவைகள் நிழல் படங்களாக ஓடிக்கொண்டிருந்தது. 'வேண்டாம்! வேண்டாம்!! அந்த நினைவே வேண்டாம்!! ஒதுக்கி தூரப் போடுவோம்!' என்று இன்னும் இறுக்கமாக கண்களை மூடிக்கொள்ள.. அந்த இறுக்கிய கண்களின் மேல் முரட்டு இதழ்கள் வந்து ஒட்டின முரட்டுத்தனமாய்..

 

"வேணாம்.. வேணாம்…" என்று வாய் என்னவோ முணுமுணுத்து.. ஆனால் வார்த்தைகள் இன்றி வெறும் காற்று மட்டுமே வந்தது தொண்டைக் குழியிலிருந்து..

 

ஆனால் அதை எல்லாம் அந்த உருவம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவளை ஆட்கொள்ளவதிலேயே முனைப்பாய் இருந்தது.

 

மெல்ல மெல்ல படர்ந்தவன் முழுதாக அவளை ஆக்கிரமித்து இருந்தான்.

 

ராட்சஷன்.. என்று மெல்ல அவள் முணுமுணுக்க..

 

"ஆஹான்.. அப்படியா?" என்ற‌ நக்கல் குரலின் முரட்டு இதழ்கள் அவளை இதழ்களை முற்றிலுமாக விழுங்கி, அவளது கண்களை சவாலாக பார்த்தது. "எங்கே இப்போது சொல் பார்ப்போம்?" என்று!! 

 

தீராவின் கண்களோ வலியிலும் விரக்தியிலும் கூடவே கோபத்திலும் கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது.

 

அவனின் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அவளை அசைக்கவில்லை. ஆனால் தேகம் கொண்ட தாபம்??

 

அந்த உணர்வுகள்.. உணர்ச்சிகள் ஒரு கட்டத்தில் அவளின் பெண்மைக்குள் அதிர்வேற்படுத்தி அவளைச் சிலிர்க்கச் செய்தது. அந்த சிலிர்ப்பில் அவள் உள்ளம் அவனுக்கு ஒத்துழைப்பதை எண்ணி பெரும் வெட்கப்பட்டாள். ஆனாலும் அவனிடமிருந்து சிறிதும் அசைய முடியவில்லை அவளால். தன்‌ நிலையினை உணர்ந்து அவன் மேல் கோபம் கொள்ள மட்டுமே முடிந்தது இந்த அபலையால்!!

 

தீராவின் கண்களும் மூக்கும் கன்னங்களும் அவனை முத்தாட அழைத்தன. துடித்த இதழ்களின் ஈரத்துளியை உறிஞ்சி சுவைக்கும்

ராட்சஷனாய் ஆனான் அவன்!

 

எவ்வளவு சுவைத்தாலும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தோன்ற, அதனை அவன் பார்வை உணர்த்த, அவன் பார்வையின் பொருளுணர்ந்த அவளிடமும் பெரும் படபடப்பு எழுந்தது. 

 

ஆனாலும் அதை கண்களில் காட்டாமல் இருக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவனும் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குமான அந்த மெல்லிய சுவரான கண்கள் எப்போது வேண்டுமானாலும் உடைபட்டு‌ வெள்ளம் வரலாம் என்ற‌ நிலை!!

 

பச்சை நரம்புகள் நெளிந்தோடிய அவளின் மிருதுவான வெண்ணிற கழுத்தில் மீசை முடிகள் குத்த அழுந்த முத்தமிட்டான் காளையவன்!

அவள் கழுத்துக் குழி சிலிர்த்து கழுத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் மென்கழுத்துத் தோலை மெல்லக் கவ்வியிழுத்து சப்பி விடுவித்தான். 

 

அவளின் கழுத்து பரப்பெங்கும் முத்தமிட்டு, கடித்து, சுவைத்து என்று

காதலாய்.. காமமாய்.. இன்பமாய்.. தாபமாய்.. மோகமாய் என்று அவன் முகத்தை அவ்வழகிய கழுத்திலேயே புதைந்திருந்தான்.

 

மெல்ல தலையைப் பின்னால் இழுத்து முகத்தை அண்ணார்ந்து அவன் பிடறி முடியை இறுக்கியபடி 

அவனை தள்ளப் பார்க்க.. அவனோ அவள் எதிர்ப்பில்.. தள்ளுதலில்

கிளர்ச்சியடைய.. மேலும் பல முத்தங்களை வைத்து விட்டு தான் அவள் முகத்தை பார்த்தான். இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டது.

 

ஒன்று தாபமாக..!!

மற்றொன்று கோபமாக..!!

 

அவன் கண்களில் கண்ட தாபத்தையும்.. இதழ்களில் நெளியும் புன்னகையையும் கண்டவளுக்கு நெற்றி ஓரங்களிலும்

மூக்குக்குக் கீழேயும் அரும்பென வியர்க்கத் தொடங்கியிருந்து.

அதில் வறண்ட தன் உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக்கொள்ள.. 

 

அவள் எச்சில் ஈரத்தில் பளபளத்த உதடுகளை கொய்த்திருந்தான் மாயதீராவின் மாயவன்.

சுவைக்கச் சுவைக்க உதடுகள் மேலும் தாகம் கொண்டதைப் போலாகி இன்னும் இன்னும் என்று ஏங்கித் தவித்து முடிக்க முடியாமல் முயன்று கொண்டிருந்தான்.

 

பயத்தாலும்.. கசகசப்பிலும் கசிந்து நிறைந்த வியர்வை பிசுபிசுப்பு இருவரையும் நிறைத்திருக்க… ஆடவனோ அணங்கவள் ஆடைகளை எளிதாக விலக்கி வியர்வையை விரட்டினான்.

 

அவனது முரட்டு கைகள் அவள் பட்டு மேனியில் பட்டும் படாமல் வருடியதால் உண்டான திடீர் தாப உணர்ச்சியை தாங்க முயன்று‌ தோற்று கண் மூடி... மனம் இனம்புரியாமல் உணர்ச்சி குவியலில் சிக்கி தவித்து கொண்டிருந்தது தீராவுக்கு.

 

ஒரு இனம்புரியாத உணர்வு அவள் தேகமெங்கும் வாரி இறைக்க.. ஆணவன் தீண்டலால் உண்டான சுக அவஸ்தை உடலெங்கும் பரவி சிலிர்த்தாலும் கூடவே நெருடலும் கூட, அவளின் அந்த நெருடல்., சிலிர்ப்பு எல்லாமே அவளின் கண்களில்.. முகத்தில் பிரதிபலிக்க.. அவனும் அவளை வைத்த கண் வாங்காமல் அந்த அழகை பார்த்தான். ரசித்தான்.. பின் ருசித்தான் இதழ்கள் கொண்டு.

 

ஓயாது இரைச்சலை ஏற்படுத்தும் கடல் அலைகள் போல அவளது மனப்போராட்டத்தால் அவளின் கைகள் மெல்ல நடுங்க.. நடுங்கும் அவள் கையை அவன் கையோடு சேர்த்து பிணைத்தான். உதட்டுக்கு மேலே அவளுக்கு அரும்பி இருந்த வியர்வையை மெல்ல துடைத்தான் நாவினால்..‌.

 

அவனின் ஒவ்வொரு தாக்குதல்களையும் சமாளிக்க முடியாத பேதை அவள் அவனிடமிருந்து பிரிய போராடி அது முடியாமல்.. அவள் திரும்பி படுத்துக் கொள்ள.. அப்போதும் அவளை பார்த்து சிரித்தன அவனது கண்கள்.. இதழ்களோ "ஆஹான்.." என்று நக்கலாக.. ஒவ்வொரு முறையும் அவனின் இந்த ஆஹான் அவள் உள்ளுக்குள் பதற‌ செய்யும்.. கூடவே இடது கை மீசை நுனியை முறுக்கிவிடும்!!

 

 

திரும்பி படுத்தவளை விடேன் என்று அவள் கழுத்தை நாவினால் சுவைத்து.. காது மடலை கடித்து.. 

சற்றே முன் நகர்ந்து கன்னங்களை கவ்வி.. அவனின் எல்லைமீறல்களில் எல்லாம் அவளின் உடம்பு நெருப்பாக கொதிக்க செய்ய.. சூடான மூச்சு காற்றை வெளியேற்றினாள்.

 

அதில் அவனது விரக உணர்ச்சி உச்சத்திற்கேறியது. அவளைப் புரட்டி பின்னால் நகர்த்தி, சுவற்றில் சாய்த்து, அழுத்திக் கொண்டு முத்தமிட்டான், அவள் உதடுகளைக் கவ்வி வெறியுடன் சுவைத்தான். அவனின் கோபம் அவளுக்கு புரிந்தது. கத்த முடியாமல் தன் நிலையை நொந்து அவன் முகத்தை பிடித்து தள்ளினாள். ஆனாலும் அவன் விடாமல் அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டான். வெறும் முத்தங்களில் அவனுக்குத் திருப்தியில்லை. 

 

வேண்டும்.. வேண்டும் என்று அவன் மோகத்தில் தத்தளிக்க..

 

வேண்டாம்.. வேண்டாம் என்று அவள் 

விரக்தியில் சோர்ந்து போக..

 

வேண்டும்.. வேண்டாமின் கட்டில் சமரில் கடைசியாக வேண்டும் வெற்றியடைந்தது.

 

"தீரா! தீரா!! என் தீரா… தீராதடி உன் மீதான என் தாகம்.." என்று 

உணர்ச்சி பிழம்பில் அவள் பிறை நுதலில் அழுத்தமாக முத்தமிட்டு நெற்றிமுட்டி..

 

"பொண்டாட்டி… மயக்கிட்டடி!!" என்றான். 

 

அவன் நெடுமாறன்… வீரநெடுமாறன்!!

 

அந்த களைப்பிலும் அவனின் வார்த்தைகள் தேளாய் அவளுக்கு கொட்ட.. தன் மேலிருந்து அவனை முயன்று விலகி "நா ஒன்னும் உம்ம பொண்டாட்டி இல்ல…" என்று மெதுவாக வந்தாலும் கூரிய கத்தியின் கூர்மையோடு வந்து விழுந்தது வார்த்தைகள் தீராவிடமிருந்து..

 

"ஆஹான்…" என்றவன்.. அவள் மேனியில் ஆடையாக மாறியிருந்த தன்னை விலக்கி அவளருகே சரிந்து படுத்து இடது கையால் தலையைத் தாங்கிக் கொண்டான். வலது கையோ அவளது மார்பில் தவழ்ந்த அந்த தடிமனான புத்தம் புது மஞ்சள் கயிற்றில் கோர்த்து இருந்த தாலியை தூக்கி அவள் கண்களுக்கு நேரே காட்டியது.

 

 

"தாலி கட்டிட்டா மட்டும் நீரு என்ற புருஷனாக முடியாது.. என்ற புருஷன்.. நீயில்ல.. அவரு…" என்று அவள் அடுத்த வார்த்தை தொடங்கும் முன் அவளது கீழ் உதட்டை பிடித்து இழுத்தவன், 

 

 

"என்ன கோவம் மூட்டுறது.. உனக்குதேன் நல்லது இல்ல தீரா.. அதுவும் இந்த மாதிரி என்கூட இருந்துகிட்டு.. வேற எந்த பேராவது உன் வாயிலிருந்து வந்துச்சு.." என்றவனின் தீப் பார்வை அவளை நடுங்கச் செய்வதாக இருந்தாலும் நடுங்கிய மனதை மறைத்துக்கொண்டு "எ..என்ன.. ச்ச..செய்வீரு..‌" என்று விடாமல் வாய் வார்த்தை ஆட.. அவளின் வார்த்தைகள் அனைத்தும் அவன் வாய்க்குள்ளே காணாமல் போனது.

 

மீண்டும் அவனது கண்களை சந்திக்க முன்பிருந்த தாபம் அனைத்தும் மாறி இரையை பிடிக்கும் கழுகின் கூர்மையாக அவள் மேனி மீது படர உடல் நடுக்கம் கொண்டவளோ.. அருகில் இருந்த போர்வையை இழுத்து தன்னை முழுதாய் மூடிக்கொண்டாள்.

 

அவளின் இந்த செய்கையில் தலையை பின்னால் சாய்த்து வெடித்து சிரித்தான் மாறன். 

 

"இன்னும் என் கிட்ட இருந்து எத மறைக்க இப்படி முடிக்கிறவ.. ம்ம்ம்..

இவ்வளோ பயம் இருக்குறவ வாய அடக்கிக்கிட்டு இருக்கணும் டி.. என் பொண்டாட்டி.. இனி எக்குத்தப்பா வாயிலிருந்து ஒத்த வார்த்தை வந்தாலும் விடிய விடிய மச்சானுக்கு கொண்டாட்டம் தான்.. உனக்கு திண்டாட்டம் தான்!

!" என்றவன் அந்தப் போர்வைக்குள் போர்வையாக்கி அவளை இறுக அணைத்தவாறே உறங்க முற்பட்டான்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top