சண்டியரே 23
லோகநாதன் வந்துட்டு போவதை ஊரார் பார்த்தாலும் யாரும் சந்தேகம் கொள்ளவில்லை மயிலிடம். ஆனால் யார் வந்து போவது என்பது போல பேச்சு அடிபட்டது. அதேநேரம் மயில் பற்றி வேம்பிடம் கண்டவர்கள் சொல்ல, அவளோ நண்பிக்காக எதிர்த்து சண்டை போட்டு மயிலிடமே அது யார் என்று தெரிந்தவள் அதையே ஊராரிடமும் பரப்பி விட்டாள்.
சில பேர் நம்பினாலும்.. பல பேர் அதை நம்பவில்லை..!
“ராக்கம்மாவை யாரோ வச்சிருக்காங்களாம்?” என்று படத்தில் வருவது போல தான் மயிலே யாரோ வச்சிருக்கானாம் என்றபடி மெல்ல மெல்ல செய்தி பரவ தியாகேசனுக்கு மனம் பதைப்பதைத்தது.
விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஊரில் பரவியது. மயில் வீட்டுக்கு யாரோ ராத்திரியில் வந்து போகிறானாம் என்ற வரை..!!
இதை தானே லோகநாதனும் எதிர்பார்த்து இருந்தான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவன், தன்னோடு சரக்கடிக்கும் நண்பர்களிடம் மெல்ல மெல்ல “போங்கடா.. அவ வீட்டுக்கு வந்து போறதே நான்தான் டா..! அவ தான் புருஷனை விட்டு தனியா இருக்காளே தெரியாதா? ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டானு அவன் மேல கோபம்.. அதே டைம் ருசி கண்ட உடம்பு சும்மா இருக்குமா? அதுக்கு தான் ராவு நான் போறது.. சும்மா சொல்ல கூடாது மயிலு செம கட்டை..!” என்று அவன் சொல்லிய விதத்தில் அவன் குடி நண்பர்களே அதையே ஊர் பூராக பரப்பினர்.
இப்படியாக.. மயிலை யாரோ வச்சிருக்கானா என்ற வார்த்தைகள் மாறி லோகநாதன் தான் வச்சிருக்கானாம் என்றவரை வந்து நிற்க.. இந்த விஷயம் கமலாம்பிகைக்கும் தெரியவர அவரும் திடுக்கிட்டு போனார்.
இப்படிப்பட்ட வார்த்தைகள் வரக்கூடாது என்று தானே “அப்பனோடு தனியாக போகாதே..!” என்று அத்தனை முறை அவளை கண்டித்தார்.
“பாவி மவ கேட்கவே இல்லையே..! கூடாத குறைக்கு அந்த குடிகார பய குடிச்சிட்டு படுத்து இருக்கிறது இப்ப பிள்ளைக்கு எப்படி பெயர் வந்து வாச்சி இருக்கு?” என்று அப்பாவிடம் அழுது புலம்ப..
“அழுவாத கமலா.. உன் தம்பி எல்லாம் சரி செய்வான்..!” என்று மகளை தேற்றியவர், “உன் தம்பி தான் போயிட்டு வரான் ராத்திரிக்கு.. நீயேன் போட்டு மனச குழப்பிக்கிற அவனுக்கு தெரியாததா? நீ அவன்ட்ட விட்டுட்டு வேலையை பாரு பேசுறவங்க பேசட்டும்..!” என்றார்.
தம்பி போய் வருவது இவருக்கும் தெரியும் தான். ஆனால் இதற்கு தானே அவர் வேண்டாம் என்றது. கணவனே ஆனாலும் இப்படி ராத்திரி மட்டும் போயிட்டு வந்தால் அந்த பெண்ணுக்கு வேறு பெயர் அல்லவா வந்து சேரும்?
இதை ஆண்களால் புரிந்து கொள்ள முடியாது..! பெண்களின் உள்ளுணர்வுகள் இவை..!
சில வார்த்தைகள்.. சில பேச்சுக்கள் ஆண்களால் எளிதில் கடந்து வர முடிந்தாலும், பெண்களால் அவற்றை புறந்தள்ள முடியாது. அதுவும் காலம் காலமாக வாழ்ந்து வரும் நெறிமுறைகளும் அந்த கற்பு என்று பெருந்தீயும் கொஞ்சம் நெறிப்பிறழ்ந்தாலே நம்மை சுட்டு எரித்து விடுமே..!!
இன்றோடு இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவர் தம்பி வரும் வரை இரவு காத்திருந்தார்.
ஆரூரன் வந்தவன் வழக்கம் போல அப்பாவிடமும் மகளிடமும் கொஞ்சி விளையாண்டு விட்டு மகளை தூக்கி வைத்து சீராட்டியவன் “என்னக்கா இன்னைக்கும் உன் மவ என் மவளை தூக்கிட்டு போனாளாமே?” என்று சிரிபாபுடன் கேட்டதும் ஆம் என்று தலையசைத்தாலும் கமலாம்பிகையின் முகத்தில் ஒரு சுரத்தையே இல்லாமல் இருப்பதைக் கண்டவன்,
மகளை கீழே தவழ விட்டு அக்காவின் அருகில் இருந்து “என்னாச்சி கா?” என்று அவன் கேட்டான்.
“நான்தான் அப்பவே நீ போவேண்ணானு சொன்னேன் இல்ல தம்பி.. இப்ப பாரு என்ன எல்லாம் பேச்சு வருது?” என்றவர் அனைத்தையும் கூறி முடித்தார்.
“கூடவே இந்த லோகநாதன் குடிக்கார பய ஏதோ வார்த்தையை விட்டுயிருக்கான். அதான்.. அவன் தான் போய் வரான்னு சொல்லிட்டு திரியுறான் போல..” என்றார்.
“அந்த நாயா?? அப்பவே நினைச்சேன் உன் புருஷன் கூட சுத்திட்டு இருக்குறானேனு ஏதோ ஒரு கேம் விளையாடுவதுனு நான் நினைச்ச மாதிரியே தான் பண்ணுது அந்த நாய். இன்னைக்கு நைட்டு இருக்கு அவனுக்கு..” என்றவன்,
“இதுக்கு நான் ஒரு முடிவு கட்ட போறேன்.. நீ தூங்க போ.. நான் பாத்துக்குறேன்” என்றவனிடம் “மகளை சரியாக பார்த்துக்கொள்” என்று தம்பியிடம் கூறி அனுப்பினார்.
இப்போதெல்லாம் ஆரூரனின் வரவை தங்கமயில் எதிர்பார்த்து இருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவனிடமிருந்து தள்ளி இருக்க முடியவில்லை.
மனம் கொண்ட காதலும்..
கணவன் என்று உரிமையும் மங்கை அவளை மாற்றி இருந்தது.
“சரி இப்போ ஊர்ல இல்லாததையா மாமா செஞ்சுட்டுச்சு.. முதல் பொண்டாட்டி இருக்கும் போது எனக்கு தாலி கட்டல தானே? அவ இல்லாத போது தானே..!” என்று மனதை தேற்றிக்கொண்டாள். அதே சமயம் ராகவியிடம் இருந்தும் பிரிந்து இருக்க அவள் மனம் வாடியது.
“இன்னைக்கு மாமா வந்துச்சுனா இத பத்தி பேசணும்.. காலையில் கிளம்பும்போது ஞாபகம் அவரோடையே கிளம்பி போயிடணும்” என்று எதிர்பார்ப்போடு அவள் காத்திருந்தாள்.
அதனால் கணவனுக்கு தெரியாமல் அவளது உடைமைகள் எல்லாம் முதல் நாளே பேக் செய்து கட்டிலுக்கு அடியில் வைத்து விட்டு வழக்கம் போல் தூங்கும்போது போல படுத்திருந்தாள்.
கதவை உள் தாழ்ப்பாள் போட்டு தான் வைத்திருப்பாள். அவன் அதை கழட்டி வருவதும் மறுநாள் திட்டிக் கொண்டு இவள் போடுவதும் ஒரு வாடிக்கையாகி போனது..!
அன்றும் வந்தவன் அதுபோல மயிலு.. என்றமெல்லிய குரலில் அழைததப்படி..
அவளின் மனது திக்கு திக்குவென அடித்தது. கதவு மூடும் சத்தம் கேட்டதும் கணவனின் அடைப்பை எண்ணி அவள் உடல் சூடாகியது, கண்ணை கொஞ்சமாய் திறந்து பார்த்தாள். அவன் தான் உள்ளே வந்து கதவை சாற்றினான்.
மயிலு.. என்று மென் குரலில் அழைத்தவன் அவள் அருகில் அமர்ந்தான். என்றும் இல்லாமல் இன்று உடல் நடுங்கியது, மூச்சு வேகமாக விட்டவளின் உடலோ வியர்த்தது. கணவன் என்ன செய்கிறான்? என்ன செய்யப் போகிறான்? என்கிற எதிர்பார்ப்பு எகிற, கொஞ்சமாய் கண் திறந்து பார்த்தாள். அவனோ அவள் அருகில் நின்று கொண்டு அவளின் முகத்தில் வந்து போன கலவையான உணர்வுகளை ரசித்துக் கொண்டிருந்தான்.
அவளோ சட்டென கண்களை இறுக்கமாக மூடினாள். அவள் விழித்து இருப்பதை கண்டு கொண்டவனோ கட்டிலில் அவள் அருகில் கையை ஊன்றிக்கொண்டு அவளின் முகம் அருகில் வந்தவன்,
“இன்னா மயிலு..
இன்னா மைலு சிரிசிக்குன…
மாமன் பக்கம் ஒரசிக்கின…
யாரை பாத்து முழிச்சிக்கின…
இங்க வந்து ஒளிஞ்சிக்கின…
இன்னா மைலு…”
என்றவன் ராகமாக பாட இன்னும் இறுக்கமாக கண்களை மூடி கொண்டால் மயில்.
அவன் விடும் மூச்சு அவள் முகத்தில் பட்டது.. அவன் வாசம் இவள் சுவாசமாய் ஆக..
ஆனாலும் உடலை அசைக்காமல் அப்படியே படுத்திருந்தாள். அவனுக்கு என்றே உரித்தான்ந்த ஆண் வாசமும்.. அவனின் பிரத்தியேக பர்ஃப்யூம் வாசமும் அவளின் நாசியை நிறைந்தது.. நுரையீரலை நிறைத்தது..!!
அவ்வாசனையையும் அவனின் நெருக்கமான ஸ்பரிசமும் அவள் உடலில் ஏதோ வித இராசாயண மாற்றத்தை செய்தது..
அவள் உணர்ச்சியை சீண்டியது..
அவள் தேகத்தை சிலிர்க்க வைத்தது..!
அப்படியே மூச்சை பிடித்து உள்ளிழுக்க அப்ப்பா இவன் வாசத்தை சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு..!
அவள் திரும்ப திரும்ப அவர் வாசனையை உள்ளிழுத்து முகர்ந்து.. வேகமாக மூச்சு விட்டு.. அதிகமாக அவனின் வாசத்தோடு சுவாசத்தை உள்ளிழுக்க..
அவளை நெருக்கமாக நெருங்கினான், அவனின் மூச்சுக்காற்று அவளின் காதினை தீண்ட.. அவனது மெல்லிய தாடியோ அவளது கனிந்த கன்னங்களை அழுத்த.. அவனது கற்றை மீசையும் அழுத்தமான உதடும் அவளது காது மடலை உரச.. பெண்ணுக்குள் ஹார்மோன்களின் சதிராட்டம்..!
சட்டென்று அவனது முரட்டுக்கை அவளை திருப்பி தன்னோடு இறுக்க அணைத்தது.
அவன் வன் நெஞ்சில் மோதி இருக்கும் அவன் பெண்மையின் மென்மையில்.. அவனின் உடல் சூடாகி, நரம்புகளுக்குள் போராட்டம் ஒன்று நடந்தது ரத்த நாளங்களில். மெழுகு சிலையாய் அவன் கண் முன் இருப்பவளை கண்டு மெழுகாய் உருகியது நொடிகளில் ஆணின் இதயம். மௌனங்கள் மட்டுமே பரிபாஷைகள் ஆகிட, இருவருக்கும் ஏகாந்த மயக்கத்தை தந்தது அந்த கணம்.
இருவரின் கண்களும் ஒன்றே ஒன்று கவ்விக்கொள்ள.. இதழ்கள் கவ்விக்கொள்ளும் தூரத்தில் இருக்க… ஆனால் இதழ்கள் இணையவில்லை இதயங்கள் இணைய வேண்டும் என்று நினைத்தவன், அவள் கை பற்றி தன் இதயத்தில் வைத்தான்.
“கேக்குதா மயிலு.. இது லப்டப் ஓசை இல்ல.. இந்த இருதய டாக்டரின் இருதயம் முழுக்க மயிலு மயிலு தான் அடிச்சிக்குது..!” என்றான் கண்களில் அத்தனை காதலை தேக்கி… அவளோ கண்களை மூடி அவன் இருதயத் தாளத்தை உணர்ந்து கொண்டிருந்தாள்.
அவளின் கை வளையலை மெதுவாக நகர்த்தி, உதடுகள் குவித்து அவளின் உள்ளங்கையில் முத்தமிட்டவனின் உதடுகள் மெல்ல மெல்ல முன்னேற..
உடல் சிலிர்த்தவள் பார்வை அவன் விழிகளில் கலந்து உறைந்து நின்றது.
அவள் விழியின் மொழியை அவன் விழிகள் உணர்ந்து சட்டென அவன் கை உயர்ந்து அவளின் கழுத்தைச் சுற்றி வளைத்தது. அவளின் முகம் கீழே இழக்கப்பட்டு உதடுகள் கவ்வப்பட்டன. சிறு திமிறல்கூட இல்லாமல் கண் மூடிச் சிலிர்த்தவள் தன்னுணர்வு மீண்ட போது அவளின் கீழுதடு அவன் பற்களால் கவ்வி உறிஞ்சி சுவைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவள் முதுகு வளைந்து முன் சரிந்து அவளின் செழுமைகள் அவன் நெஞ்சோடு புதைந்திருந்தன..
அடுத்த நிமிடம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தான் ஆரூரன்.
கை கால் நெளிவுகள்.. இருவரின் பிணைந்த பின்னல்கள்.. மெலிதான உடலசைவுகள்.. முக இணைவுகள், மூக்கு உரசல்கள்.. இதழோசைகளென காதலில் தொடங்கி மோகத்தில் கரையத் தொடங்கினர்.
மெல்ல மெல்ல அவன் இயக்கத்தின் வேகம் கூடியது. அவன் இடுப்பதிர்வின் வேகத்தில் அவள் உடல் குறுகி அதிர.. "ஈஸி.. ஈஸி மயிலு..” என்று அவளது காது மடலை கவ்வி அவன் கவி பேச.. அவன் கால்கள் அவள் கால்களோடு பின்னின..!
மயிலின் தலையை இரண்டு கைகளிலும் அழுத்திப் பிடித்து முடிகளுக்குள் விரல்கள் நுழைத்துக் கோர்த்தபடி, கனிந்து சிவந்திருக்கும் அவளின் முகமெங்கும் முத்தமிட்டுக்கொண்டே அவளை ஆட்கொண்டான் ஆரூரன்.
அவளும் கிறங்கிச் சிலிர்த்து முனகித் தவித்தபடி அவன் முகத்தில் பல முத்தங்களை கொடுத்தாள். அவள் தேகமோ சிறு குருவிபோல மெல்லிய கொலுசொலியை இசைத்தப்படி அவன் தேகத்தோடுப் பின்னி.. நெறித்து.. விலகி.. உயர்ந்து நிலையற்று தவித்தன..!
வெற்றுடல்கள் ஒன்றோடொன்று இணைந்து உடைகளின் தடைகளின்றி இன்னிசையாய் பொழிந்தது மோகன கானம். ஆரூரன் மூச்சிறைக்க அவள் முகத்தில் முத்தாடியபடி "மயிலு.. மயிலு.. மை லவ்" முணுமுணுத்தவன் உச்சம் எய்தி, அவளையும் பலமுறை எய்த வைத்து அவளுள் இரண்டற கலந்தான்.
மறுநாள் வெகு விடியற்காலைகளில் எழுந்த தங்கமயில் குளித்து தலையில் சுற்றிய துண்டோடு வாசல் தெளிக்க சென்றாள். எப்பொழுதுமே நேரம் கழித்து தான் எழுந்திருப்பாள். நேற்று கணவனோடு மனம் நிறைக்க கலந்தவள் காலையில் அவனோடு வீட்டிற்கு செல்லலாம் என்று நேரமே எழுந்து வாசல் தெளிக்க வந்தாள்.
மது போதையில் தூங்கும் அப்பாவை பார்த்து “டெய்லி இதே வேலையா போச்சு..” என்று தந்தையை திட்டியபடி அவள் வாசல் தெளிப்பதை.. அவ் வாசல் வலி போவோர் வருவோர் அனைவரும் வித்தியாசத்தோடு பார்த்தனர்.
அதிலும் முகம் களையாக காலையிலேயே தலைக்குளித்து நின்றவளின் அந்தக் கோலம் ஒரு சிலருக்கு வம்பை வளர்க்க தூண்ட..
“என்ன மயிலு.. காலையில தல குளிச்சிருக்க..” என்று கேட்டுவிட்டு செல்ல..
முதலில் பதில் சொல்ல வாய் எடுத்தவள் பின்பு நிலைமை புரிந்த சும்மாதான் என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.
அங்கே இருந்து தூங்கிக் கொண்டிருந்த ஆரூரனை பார்த்து “எல்லாம் இவராலதான்.. என்னால யாருகிட்டயும் பதில் சொல்ல முடியவில்லை..” என்று அவன் புஜத்தில் குத்த..
“ஏய்.. தூங்க விடு டி..” அவனும் அவளை இழுத்து தன்னருகில் படுக்க வைத்துக் கொண்டு “எதுக்கடி காலையிலேயே எழுந்த இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு..!” என்று அவளை தன் அணைப்பிலேயே வைத்துக் கொள்ள.. அவனிடம் பேச வேண்டியவைகள் நிறைய இருந்தாலும் இப்போதைக்கு அவனது கையணைப்பில் கண்களை மூடி அமைதியாக படுத்திருந்தாள் மயில்.
காலையில் மயிலை பார்த்தவர்கள் ஊர் வம்பு வழக்கு என்று கமலாம்பிகை வீட்டிற்கு சென்று “என்ன கமலா உன் தம்பி இங்க இருக்கான்.. நீயும் எங்க இருக்க உன் பொண்ணு காலையிலேயே குளிச்சு முடிச்சு.. புது பொண்ணாட்டாம் வாசலெல்லாம் தெளிக்கிறா..” என்றபடி நக்கல் பேச..
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவர், “வந்து நீயே என் முன்னாடியே என் பொண்ணு கிட்ட கேளேன்..” என்று அவர் இழுக்க..
“ஐயோ அப்படியெல்லாம்..” என்று அந்த பெண்மணி பயந்து ஓட..
“நீ வாடி… முதுகுக்கு பின்னாடி அத்தன புறம் பேசுறீங்களே இன்னைக்கு நேருக்கு நேராவே கேளுங்க..” என்று இழுத்து தன் வீட்டு வாசல் முன்னே நிற்க..
அப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கண்டு கோபம் வர அருகில் இருந்த தண்ணீர் எடுத்து அவர் மேலே கொட்டினார் கமலாம்பிகை.
அவரும் முதலில் தண்ணீரில் மழை பெய்கிறதோ என்று அதிர்ந்து எழுந்தவர் காலையிலேயே கமலாவை கண்டவர், தூக்கத்தில் தான் இருக்கிறோம் என்பது புரிய..
“தூக்கத்தில் வந்து டிஸ்டர்ப் பண்ற டி போ போ.. உங்க அப்பன் குண்டுக்கு போடி.. நீ இல்லாம நான் இங்க நிம்மதியா இருக்கேன்..” என்று மீண்டும் தூங்க..
“எடு அந்த விளக்குமாத்த..” என்றவர் வசைப்பாட ஆரம்பிக்க.. அதற்குப்பின் தான் அது கனவில் நிஜம் என்று உணர்ந்த தியாகேசன் “எதுக்கு இப்படி காலையிலேயே வந்து வசைப்பாட இருக்கிறவ?” என்று காதை குடைந்து கொண்டார்.
“உன்ன நம்பி என் என் மகளை விட்டுட்டு போனா.. அதுக்கு தான்யா ஊருக்குள்ள அவ பேரை நாரடிச்சு வச்சிருக்க.. நீ சீரழிஞ்சது பத்ததாதுனு அவ பெயரையும் எதுக்கயா சீரழிச்சு வைக்கிற?” என்று அதட்டியதும் மனைவி சொல்வதை கேட்டு ஒரு நொடி திகைத்தவர்,
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. என்னை மீறி யாரு போய்டும் வீட்டுக்குள்ளனு பூட்டியே வச்சிருக்கேன்” என்றார்.
“அட அண்ணா.. நானே நிறையவாட்டி பார்த்து இருக்கேன் உங்க வீட்ல இருந்து ஒருத்தன் முகத்த மூடிக்கிட்டு ஓடி போவான்” என்றான் அந்த ஏரியாவில் பால் ஊற்றும் பால்காரர்.
“உன் தம்பியா? எனக்கு தெரியாம எப்படி என் வீட்டுக்குள்ள வந்தான்?” என்று தியாகேசன் குதிக்க..
கமலாம்பிகை முறைக்க.
“அவன பார்த்தா ஆரூரன் மாதிரி தெரியாது. ஆரூரனோட உடல் கட்டு எல்லாம் நமக்கு தெரியாதா? இவன் சொங்கி பய மாதிரி இல்ல இருப்பான்..” என்று மற்றொருவனும் கூற.. ஊரின் கால்வாசி பெயர் அங்கேதான் இருந்தனர்.
“ஆக.. காலையில் விடிந்ததும் அவனவன் பொழப்பை விட்டுட்டு அடுத்த வீட்டில என்ன நடக்கிறது தான் பாத்துட்டு இருக்கீங்க?” என்று சாடினார் கமலா.
“எவன்டா அவன் என் வீட்டுக்குள் இருக்குறது.. எழுந்து வாடா..” என்று
தியாகேசன் கத்த..
“அட..! இது இந்த தருணத்தை தானே எதிர்பார்த்துட்டு இருந்தேன்..” என்று லோகநாதன் மெல்ல முகத்தை துண்டால் மூடியப்படியே வெளியே வர.. இந்த அதிர்ச்சியை கமலம்பிகையும் எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் லோகநாதனை, ஆனால் தியாகேசனுக்கு தெரிந்தது.
“இவனே தான்.. இவன் தான் டெய்லி இந்த வீட்டில் இருந்து இப்படி மூஞ்ச மூடிட்டு வருவான். நான் தான் பார்த்து இருக்கேனே.” என்று பால்காரரும் கூற..
“புடிடா அவன..” என்று அவன் முகத்திரை கிழிக்க அங்கே லோகநாதனை கண்டு அனைவரும் அதிர்ந்து நெஞ்சில் கை வைக்க..!
அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் காது கொடுத்து கேட்க முடியாதவையாக இருந்தன..
“என்ன பண்ண சொல்றீங்க? என்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டதே தியாகேசன் மாமா தான். பொண்ண பிரிச்சு கூட்டி வந்துட்டோம். பொண்ணுக்கும் சின்ன வயசு அவளும் சில பலதை கண்டுருப்பா.. இப்படி விட்டா அவ மனசு கஷ்டப்படும்.. இல்லேன்னா திரும்ப ஆரூரனை தேடி போவா.. அப்படி இப்படின்னு இருந்து.. நீ என் பொண்ண இரண்டாம் தரமா கட்டிக்கனு என கூட்டிட்டு வந்து விட்டதே இவர்தான்..” என்று தியாகேசன் செய்த வேலையை மாமா வேலையாக்கி அவன் கூற..
நெஞ்சே வெடித்து விட்டது தியாகேசனுக்கு. இவன் இந்த திட்டத்தை சொல்லும் போதே வேண்டாம் என்று மறுத்தவர் அவர். இன்று அவர் மேலே பழியை போட்டால்..
“அடப்பாவி..! கூட இருந்து கழுத்தை அறுத்துட்டியேடா..!” என்று அவன் மீது பாய்ந்து அடித்தார் அவர். இருவரையும் பிரித்து விட்டனர் ஊரார்.
“என்ன கமலா உன் புருஷனே இப்படி செஞ்சிருக்கான்? அப்பனா இவன்?”
என்று சிலர் திட்ட..
“என்ன இருந்தாலும் மயிலுக்கு சின்ன வயசு தானே?” என்று சிலர் மயிலின் வாழ்க்கையையும் ஒழுக்கத்தையும் அங்கே கூரையில் ஏற்ற..
தம்பி கண்டிப்பாக மகளின் அறையில் தான் இருப்பான் என்று யோசித்தவர் கணவனின் செல்லை வாங்கி அதில் தம்பியின் நம்பரை அழுத்த ரிங் போய்க்கொண்டே இருந்தது. தொடர்ந்து சத்தம் கேட்க முதலில் விழித்த மயில்,
“என்னது அப்பா நம்பர்ல இருந்து கால் வருது இவருக்கு?” என்று போனை எடுத்தவள் ஏதும் பிரச்சனையா என்று வேகமாக வெளியே வந்து பார்க்க அங்கே நின்ற கூட்டத்தைக் கண்டு ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
வழக்கம்போல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ பிரச்சனை என்று நினைத்து “என்னம்மா? என்ன பிரச்சனையா? அப்பாரு என்ன பண்ணாரு?” என்றபடி வர..
மகளின் தோற்றத்தைக் கண்டு கமலாவுக்கு நெஞ்சில் ஆறுதல் ஆனால் பேச்சு வேறு மாதிரி அல்லவா செல்கிறது என்று நடந்தவற்றை கூற கண்கள் கலங்க அப்பாவை பார்த்து ச்சீ என்றாள் வெறுப்போடு..!!
“இல்ல இல்ல.. இல்ல மயிலு நான் அப்படி எல்லாம் பண்ணல.. தினமும் ராத்திரி நீ தூங்குனது அப்புறம் நான் உன்னைய வீட்டில் வைத்து பூட்டிட்டு சாவியை ஏன் பட்டாபட்டி அன்ராயருல தான் வச்சிட்டு தான் தண்ணி அடிப்பேன்..” என்று சாவியை தேட.. அதுவும் அங்கு இருந்தா தானே? அதைதான் லோகநாதன் திருடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து விடுவானே??
சாவியை காணாமல் தடுமாறியவரின் முன்னே சாவியை காட்டியவன் “நீதானே மாமா என்கிட்ட கொடுத்த?” என்றதும் இன்னும் வெறி வந்து அவனை அடிக்க அன்னையை கட்டிக் கொண்டு அழுதாள் மயில்.
“நான் என்னமா தப்பு செய்தேன்? இப்படி ஒரு பேச்சா மா எனக்கு? இவரை தப்பான நம்பி வந்தது குத்தமா?” என்று அவள் கதற..
“உன் மாமன் எங்கடி?” என்றதும் உள்ள என்று அவள் மென் குரலில் சொல்ல..
அதே நேரம் போன் அடித்தும் மனைவி எழுந்து சென்றதிலும் விழித்தவன் வெளியில் இருந்து ஏதோ பேச்சுக் குரல் கேட்க.. என்ன சத்தம் என்றபடி வந்தவன், கதவை திறந்து இருப்பதை பார்த்து..
“இந்த மாமனார் கதவை பூட்டி இல்ல வா வச்சிருப்பாரு.. இன்னைக்கு என்ன தொறந்து இருக்கு..” என்று
கைகளை உயிரே தூக்கி நெட்டி முறைத்தபடியே வெற்று மார்புடன் வேஷ்டியோடு அங்கே வந்து நின்று “என்ன? என்ன சத்தம் இங்க? மனுசனை தூங்கவிடாம?” என்று கேட்க இப்போது ஊரே அதிர்ந்து அவனைப் பார்த்தது..!!
“மாமா..” என்றபடியே இவள் கதறி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொள்ள.. அவளை தோளோடு அணைத்தவன் “என்ன பிரச்சனை?” என்று கரகரத்த குரலில் கேட்டான். அதுவே சொன்னது இன்னும் அவன் தூக்கத்திலிருந்து சரியாக விழிக்கவில்லை என்று.
“மாமா.. அது வந்து.. அவன்..” என்று லோகநாதன் காட்டி பேச முடியாமல் திணறினாள். அதற்குள் கமலாம்பிகை அனைத்தையும் ஒப்பி வைக்க…
திரும்பி மனைவியை பார்த்தவன் “அறிவு இருக்காடி உனக்கு?” என்று அவன் கேட்ட விதத்தில் அதிர்ந்து போய் அவனை பார்த்தால் மயிலு.
“உன்னை தப்பா பேசினவன் எவனோ எவளோ அவங்க கன்னத்திலேயே செருப்பை கழட்டி அடித்து இருக்க வேண்டாமா? ஆரூரன் பொண்டாட்டி இத செஞ்சிருந்தா நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். அதை விட்டுட்டு அழுது புலம்பற? அதுக்கப்புறம் உன்னை ஒருத்தி பேசு நாக்கு வருமா?” என்றதும் கூட்டமே பயந்தது இவனை இப்படி சொல்கிறான் என்று.!
“இவ என் பொண்டாட்டி..! நான்தான் நைட் இவ கூட இருக்கேன் உங்களுக்கு சந்தேகமா இருந்தா இன்னும் பத்து மாசத்துல இவ என் ஜாடையிலே புள்ள பெத்து தருவா.. அப்ப வந்து பாருங்க.. சரியா?” என்றான் மனைவியை அணைத்துக் கொண்டு..
“அப்ப இவன் எப்படி உங்க வீட்டில் இருந்து..” என்று லோகநாதன் காட்டி அந்த பால்காரர் கேட்க..
“வீட்டுக்குள்ள ஒரு திருடன் வந்தா அவனை வெச்சு வீட்டு பொம்பளையோட பேசுவீங்களா? அப்ப அவனவன் வீட்ல இருக்குற உங்க புருஷன் பொண்டாட்டி எல்லாம் ஒழுங்கா இருக்காங்களான்னு போய் பாருங்க.. இல்ல வேற யாராவது பூந்துறை போறாங்க..” என்றான் நக்கலாக..
“அது எப்படி இன்னொருத்தன் பூந்தா நாங்க சும்மா விட்டுடுவோமா? அதுக்குன்னு என் பொண்டாட்டியை நம்பாமல் போயிடுவானா?” என்று அவன் கேட்க..
“அதேதான்..! எவன் உள்ளுக்குள்ள வந்தாலும்.. ஊரே பேசினாலும் என் பொண்டாட்டியை சந்தேகப்படுறவன் நான் கிடையாது..! போய் அவ வீட்டு ஜோலிய பாருங்க..” என்றவன் லோகநாதனை பார்த்து “உனக்கு தனியா இருக்குடா” என்றான். ஆரூரனை அங்கு எதிரே பார்க்கவில்லை லோகநாதன். நடுங்கிக்கொண்டே இருந்தவன் மெல்ல அவ்விடம் வெட்டு நழுவி விட்டான்.
மாமனை அருவருப்பாக பார்த்து,
“ஒரு அப்பனாவது நீ ஒழுங்கா இருப்பேன்னு நினைச்சேன்..* என்று அவரை வெட்டும் பார்வை பார்க்க தானாக அவரின் தலை கீழே குனிந்து கொண்டது.
“நம்ம வீட்டுக்கு போலாம் போய் உன்னோட திங்ஸ் எடுத்துட்டு வா..”
“இந்த வீட்டிலிருந்து ஏதும் வேணாம் மாமா..” என்று நடுங்கும் கோழி குஞ்சாய் அவள் அவன் அருகில் நின்றிருக்க..
“அட்லீஸ்ட் என் சட்டையாவது எடுத்துட்டு வாடி. நான் இப்படியே வெளிய போக முடியாது?” என்றவனை முறைத்து பார்த்தவள் வேகமாக சென்று அவனது சட்டையும் இருவரது மொபைல் ஃபோனை மட்டும் எடுத்துக் கொண்டு வர அப்படியே அக்கா மனைவியோடு வீட்டிற்கு சென்றான் ஆரூரன்.
இவர்கள் எல்லாம் இந்த பிரச்சனையின் தீவிரத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க…
அப்பொழுது தியாகேசனிடம் இருந்து ஃபோன் வர அலட்சியம் செய்து விட்டான் ஆரூரன்.
திரும்பத் திரும்ப ஃபோன் வர “என்னையா வேணும் உனக்கு?” என்று ஆத்திரமிக ஆரூரன் கத்த…
“மாப்ள என்ன காப்பாத்து.. மாப்பிள்ள தயவுசெய்து என்னை காப்பாத்து மாப்பிள்ள..” என்று கத்தியவர், இடத்தை சொல்ல..
எதுக்கு அங்கு என்று யோசனையோடு சென்றவன் திகைத்து நின்றான். ஏனென்றால் அங்கே மாப்பிள்ளை கோலத்தில் இருந்த தியாகேசனை பார்த்து..!
