கண்ணம்மா 12

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 12

 

"ஐய்யய்யோயோ…..!" என்ற அலறல் கேட்க இருபக்கமே அதிர்வுகள்!!

 

'என்னடா மங்கையின் அழகிய அதிரங்களுக்கு பதில் அடர்ந்த மீசை நம் உதடுகளுக்கு இடையே தட்டுப்படுகிறதே.. ச்சீ.. கருமம்..' என்றவரே அவசரமாக அறையின் விளக்கை போட்ட ஆதித் அதிர்ந்து தான் போனான். அங்கே நின்றிருந்த கதிர்வேலனை பார்த்து!!

 

அங்கே மீசையை கூடவே உதடுகளையும் சேர்த்து பொத்தியபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தார் அவனின் மாமனார்!

 

"மாப்பிள…" என்று அவனை கண்டு பாவமாய் விழித்தார் ஆதித்தின் சின்ன மாமனார் கதிர்வேலன்.

 

"அச்சோ.. அங்கிள்.. சாரி…" என்று இவன் முகத்தை மூடிக்கொண்டான்.

 

மகளை கரெக்ட் பண்ண சொன்னா.. அடேய்.. நீ என்னடா மாமனார கரெக்ட் பண்ற!

 

"பரவாயில்லை விடுங்க.. விடுங்க.. மாப்பிள்ள இதுக்கும் நாங்க தான் காரணம்.." மனைவிக்காக கணவனாய் ஆதித் ரொம்பவும் ஏங்கி போயிருக்கிறான் என்று அந்த குற்றத்தையும் தன் மேல் போட்டுக்கொண்டார் நல்லவராய் கதிர்வேலன்..!!

 

காலம் எல்லாவற்றையும் மாற்றுவது போல கதிர்வேலனையும் மாற்றி இருந்தது.

 

கதிர்வேலன் இப்பொழுது புதுப்மாப்பிளை போல தயங்கி தயங்கி நின்றியிருக்க...

 

ஆதித் புது மணமகள் போல அவரைப் பார்க்கவே தயங்கி கீழேயே பார்த்துக் கொண்டு நிற்க..

 

"அது வந்து.. நான் இங்க வந்து…" என்று அவர்‌ இழுக்க..

 

"நானும்.. வந்து.. தீப்ஸ்னு நினைச்சு… வந்து…" என்று அவன் இழுக்க…

என்று இருவரும் ஒரே நேரத்தில் பேசினர். பின் சற்று நேரம் அங்கே அமைதி.

 

"ரொம்ப ரொம்ப நன்றி மாப்பிள" என்று சிறிது நேரம் அமைதிக்கு பின் தன் மௌனத்தை உடைத்து மனதார நன்றி உரைத்தார் கதிர்வேலன்.

 

"ச்ச.. என்ன அங்கிள் இது.. நன்றியெல்லாம் எதுக்கு… குகன் இந்த மாதிரி செஞ்சா அவனுக்கு நீங்க நன்றி சொல்லுவீங்களா? இல்லை தானே?"

என்றதும் இன்னும் என்ன அவரின் மனதில் அவன் உயர நிகழ்ந்து போனவரை அவனைப் பார்த்தார் கதிர்வேலன்.

 

"அப்புறம் எனக்கு மட்டும் எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க? நான் உங்க வீட்டு ஆள் இல்லை.. அப்படி தானே?"

 

"அச்சச்சோ.. அந்த அர்த்தத்துல நான் சொல்லல மாப்ள!" என்று அவரின் மாப்பிள்ளையை இன்னும் அவன் சரியாக கவனிக்கவில்லை. அவருமே அவனை மனமார ஏற்றுக் கொண்டதால் தான் மாப்பிளை என்று கூப்பிடுகிறார் என்பதை அவருமே உணரவில்லை.

 

"ஃப்ரியா விடுங்க அங்கிள்… நீங்க என்ன மனசார ஏத்துக்கணும்னோ உங்க மகள எனக்கு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்றோ இந்த விஷயத்துக்குள்ள நான் இறங்கல! ஏன்னா… ஒரு தொழிலை பண்றங்களுக்கு தான் மற்ற தொழிலதிபரோட வலி புரியும்! நஷ்டம் தெரியும்!! நானும் ஒரு தொழிலதிபன்!! கூடவே இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு ஒரு நல்ல பேரை உருவாக்குவதெல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை அங்கிள்…"

 

"இதே மாதிரி நானும் சேனல் ஒன்னு ஆரம்பிச்சு ரொம்ப கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்தேன்.. நான் பண்ண தப்பால் அது என் கையை விட்டு போச்சு…" என்று பெருமூச்சு ஒன்றை விட்டவன், "அது கை விட்டுப் போகும்போது அந்த வலி… என்னன்னு எனக்கு தெரியும்! அதே வலி உங்களுக்கு வரக்கூடாது என்று நினைத்தேன் அங்கிள். இதுல எங்கேயுமே தீப்ஸ் இல்ல அங்கிள்..!! எனக்காக.. உங்களுக்காக.. பெரிய மாம்ஸுக்காக மட்டும்தான் இதை செய்தேன்! ஏன்னா அவரோட பலமே நீங்கதான்" என்றதும் கதிர்வேலன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பாய்ந்து அவனை இறுக்க அணைத்து கொண்டார்.

 

வார்த்தை பேசாத மொழிகளை எல்லாம் மௌனமும் அவரின் இறுக்கிய அணைப்புமே பேசிக் கொண்டிருக்க.. அவனும் அவரை அணைத்து கொண்டான்.

 

"ரிலாக்ஸ் அங்கிள்.. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காமல் நிம்மதியா தூங்குங்க! இனி இந்த பிரச்சனைக்குள் நீங்க இல்லை" என்றதும் அவனைப் பார்த்து சந்தோஷத்தோடு தலையாட்டிப்படியே சென்றார் கதிர்வேலன்.

 

ஆதித் சொன்னது உண்மைதான் இந்த பிரச்சினையில் இருந்து அவரை விடுவித்ததன் முக்கிய நோக்கம் அவர் தாராவின் சித்தப்பா என்பதை காட்டிலும் ஒரு தொழில் அழிய விடக்கூடாது.. பொறுத்தலில் அதிபரை அவர் அவமானப்பட்டு விடக்கூடாது.. என்றுதான்! 

 

முன்னால் தான் செய்து தவறுக்கு ஏதோ சிறு பிரசித்தம் போல தான் அதை நினைத்தான். அதிலும் அவர் முகத்தில் தெரிந்த அந்த மன நிம்மதி சந்தோஷம்.. இதற்கு எத்தனை பணம் கொடுத்தாலும் ஈடாகுமா என்ன?

 

ஒரு பெருமூச்சு விட்டபடி நின்றிருந்த அவனின் முதுகை இரு தளிர் கரங்கள் பின்னால் இருந்து அணைத்து கொண்டு "சித்தப்பாக்கு மட்டும் தான் கட்டிப்பிடி வைத்தியமா? எனக்கு எல்லாம் இல்லையா?" என்று கிள்ளை மொழி மிழற்றியது.

 

"அப்போ நான் நினைச்ச மாதிரியே நீ என்னை தேடி வந்திருக்க.. இங்க இருந்து ஒட்டி கேட்டுட்டு இருந்தியா.. நானும் என் மாமனாரும் பேசினத? தீபுமா தப்புமா… இது ரொம்ப தப்புமா!" என்றபடி அவளை தன் முன்னால் கொண்டு வந்தான் ஆதித் நிகேதன்.

 

சிவந்த நீள் வடிவ முகம்… காண்டீபன் வில்லென்ற புருவங்கள்.. 

கண்மையிட்ட நீள விழிகள்.. 

 

சற்றே தடித்த சிவந்த இதழ்கள்.. நெற்றியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு.. காதில் காதல் பாடும் சின்ன ஜிமிக்கிகள்.. 

 

ஐந்தரை அடி மெலிந்த உடல்.. புடவையில் அடங்க மறத்த அவளது மென்மைகள்… 

 

அவளை முழுமையாக பார்த்தவன் பெருமூச்சு விட..

 

"என்ன டா.. ‌பெரு மூச்சு எல்லாம் பலமா இருக்கு?" என்றாள் கண்டிக்கும் பார்வை பார்த்து…

 

“என்னது டா வா.. கொழுப்பு டி உனக்கு” என்றவன் அவள் மூக்கை செல்லமாய் கடிக்க…

 

“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. பொறுக்கி.. ” என்றவள் அவன் மார்பில் கடிக்க… 

 

“ஸ்ஸ்ஸ் ஆஆ ராட்சசி.. என்னை கடிக்கிற.. இரு டி.. உன்னை என்ன பண்ணுறேன் பாரு… ” என்றவன் அவளின் இடையை அழுத்தி அலேக்காக தன் தோளில் போட்டு கொண்டான்.

 

“டேய்.. என்ன பண்ணுற.. ” என்று அலறியவளின் கால்கள் அந்தரங்கத்தில் துள்ள… கால் கொலுசுகள் குலுங்கி சத்தத்தை எழுப்ப.. அவனோ மெத்தையை நோக்கி நடையை போட்டான்.

 

"வர வர மரியாதை தேயுது.. ஒழுங்கா மாமானு கூப்பிடு.. விடுறேன்" என்றவன் இன்னும் இறுக்கிக் கொண்டான் அவள் இடையோடு..

 

"என்னது மாமா வா? போடா.. சொல்ல முடியாது!" என்று அவள் மிஞ்ச..

 

"அப்ப இன்னைக்கு நைட் என் கூட தான் நீ.. மாமா சொல்ற வரை உன்னை விடுறதாயில்லை தீப்ஸ்.." என்றான் சரசமாக…

 

"அய்யய்யோ.. உங்க சின்ன மாமியாவுக்கு தெரிஞ்சுது கொட்டி கொட்டியே என் மண்ட மேல கொண்டைய வரவழைச்சிடு வாய்ங்க.. உங்க பெரிய மாமியா சீக்குமாறு எடுத்து பிய்ய பிய்ய அடி வெளுத்துடுவாய்ங்க.. உங்க இரண்டு மாமானரும் கண்ணு காது வாய் மூடிட்டு அமைதியா இருப்பாய்ங்க… உங்க மச்சான் மச்சினிக எல்லாம் கரிகாலன் மேஜிக் ஷோ மாதிரி வேடிக்கை பார்ப்பாய்ங்க… இதுக்கெல்லாம் நான் ஆளில்ல.. என்னைய ஆள் விடுங்க சாமி!" என்று மற்றதை பேசினாளே ஒழிய.. அந்த மாமா என்ற வார்த்தையை சொன்னாள் இல்லை!

 

"வாவ்.. நல்லா இருக்கும் போலிருக்கே!! ஃபேமிலியா எண்டர்டெயின்மெண்ட் பண்ணலாம் போலயே.. ஐ லைக் யுவர் ஃபேமிலி தீப்ஸ்.." என்றவன், "அப்போ நாளைக்கு இருக்கு… ஒரு கலாட்டா கச்சேரி. அதுக்கு முதல் இப்போ நம்ம காதல் கச்சேரி!"

 

"ப்ளீஸ்.. நிக்… நிக்.. வேணாம்.. வேணாம்.. யாராவது பாத்திட போறாங்க.. விடுங்க நிக் என்னை.. விடு” என்று துடிப்பதை ரசித்தவன், தோளில் போட்டிருந்த வண்ணமே அவன் அதரங்களுக்கு அருகில் தெரிந்த அவளின் எலுமிச்சை நிற மெல்லிடையை கவ்வி கடித்தான். அவன் உதட்டின் சூட்டில் துடி துடித்தாள்.

 

அவளுடைய மென்மைகள் இரண்டும் அவன் நெஞ்சில் நசுங்க.. மெதுவாக நழுவினாள். நெஞ்சு படப்படக்க.. அவளை கட்டிலில் சாய்த்தவன், கன்னத்தில் உதட்டால் தேய்க்க..

 

“நிக்.. நோ.. யாரவது வந்துருவாங்க.. ப்ளீஸ்.. ”

 

“வந்தா வரட்டும்.. ” என்றவன் அவளுள் மூழ்குவதிலேயே குறியாக இருந்தான்.

 

“அவ்வளவு தைரியமா உனக்கு நிக்?” சீண்டினாள்!

 

“ம்ம்ம்ம்.. என் தைரியத்தின் அளவை பார்க்குறியா?" கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.

 

“பொறுக்கி… வலிக்குது டா.. ” சிணுங்கினாள்!

 

"என் பொண்டாட்டி தானே டி நீ? பின்ன யாரு வந்தா என்ன? பார்த்தா என்ன?" அவள் மூக்கோடு மூக்கு உரசினான்.

 

"அதுக்குனு.. ஒரு நேரம் காலம் இல்ல நிக்?" என்று அவள் விலக முயல.. அவளை கைப்பற்றி..

 

"தீப்ஸ்.. எல்லாம் மறந்து போச்சுடி…" என்று அடங்காமல் அவள் அங்கங்களில் 

அலைந்த கரங்களும்.. அவள் பொன் முகம் எங்கும் முத்த ஊர்வலம் நடத்திய இதழ்களும்… பெண்ணவளை வேறொரு உலகத்திற்கு இட்டு சென்றது.

 

அதுவரை அனத்தியவள் அவனின் அணைப்பில் அனலிட்ட புழுவாய் துடித்தாள். அழுத்தமாக அவளின் வெண் கழுத்தில் முத்தமிட்டான்.

"நிக்.. நோ..!" உடல் கூசி அவனைத் தள்ள... 

 

"ம்ஹூம்…" என்றவன் உதடுகள் அவள் கழுத்துப் பரப்பெங்கும் ஆதூரத்துடன் முத்தமிட்டு கொண்டே இருந்தன.. மெல்ல கவ்விச் சப்பின... 

மேலிருந்து கோடிழுத்து நெஞ்சப் பரப்பில் அலைந்தன..

இறங்கி மார்பு மத்தியில் மெல்லி முத்தமிட்டன.. ஆதித்தின் ஈர 

உதடுகள்!!

 

அவள் இதழ்கள் செய்த மாயத்தில் நெகிழந்தவன், “மாமா.. மாமா..” எனக் கிறக்கத்துடன் முணகி அவனைத் தழுவிக் கொள்ளத் தவித்தாள் தாரா. அவளின் முதல் அழைப்பு மாமாவென்று!

 

ஏனோ.. அந்த வார்த்தை அவனுள் ஒருவித மயக்கத்தை பரப்ப.. இதத்தை அளிக்க.. காதலை பெருக்க.. மோகத்தை தூண்ட.. இன்னும் இன்னும் அவளுள் மூழ்கினான்.

 

அவனின் தேடலில் தொலைந்தது என்னவோ அவள் தான்!

 

அவன் முடியை பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள். 

 

அவனும் அவளது வயிற்றில் மென்மையாக புதைந்தான்.

அவளின் சின்ன நாபி குழியும் அதனை சுற்றியுள்ள அழகிய பொன்முடிகளும் சிலிர்த்து சுழித்திருக்க.. அவை இன்னும் அந்த ஆலிலை வயிற்றுக்கு அழகை சேர்க்க… அதன் கவர்ச்சி அவனின் ஆசையைச் சுண்டி இழுத்தது. குனிந்து அவள் நாபியில் மீசை உரச அழுத்தமாக முத்தமிட்டான். 

 

அவள் கூசிச் சிலிர்க்க, அவளது கையை அவனது சிகைக்குள் நடனமாட… அவன் இதழ்களும் நாவும் இங்கே நர்த்தனமாட… தாம்பத்தியத்தின்‌ அரிச்சுவடி ஆராம்பமானது!!

 

"மாமா.." என்று அவள் மோகனராகம் பாடினாள், அவனின் மெல்லிய மீசை முடிகள் குறுகுறுத்து சிலிர்க்க வைத்ததும்…

 

அவள் நாபி குழியையும் அதைச் சுற்றிய மெல்லிடையையும் சத்தம் வர முத்தமிட்ட ஆதித் இச் இச் என்று தாளம் இட்டான்..!!

 

"போதும் மாமா…"

 

"தீராதடி தாரா.. உன் மீதான மோகம்"

 

அவளது இமைகளும் படப்படத்தன. அவனது வெப்ப மூச்சுக் காற்று பட்டு அவளது கண் இமை நரம்புகள் கூட சிலிர்த்தன.  

 

 

"ம்மாமாஆஆ..." என்றவளது வார்த்தைகள் தொண்டைக் குழியை விட்டு வெளியேறவில்லை.

 

"ம்ம்ம்.. சொல்லுடி தாரா" அவனது உதடுகள் இப்போது அவளின் கண் இமை மீது அழுந்திப் பதிந்தன.

 

கண்கள் மூடி சுக லயிப்பில் இருந்தவள், "மாமா.. மாமா" அவளின் குரலில் ஆயிரமாயிரம் சுருதிகள் இழைந்து மோகத்தில் குழைந்து வந்தது.

 

"முடியலைடி!! உன்னைய இப்படி பக்கத்தில் வச்சுக்கிட்டு கட்டுப்பாட்டோடு இருக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா இருக்கு.. ஆழிப்பேரலை போல அமைதியான என் வாழ்க்கையில் வந்து என்னை அப்படியே சுருட்டி மடக்கி எடுத்துக்கிட்ட டி.. உனக்குள்ள நானே தொலைஞ்சே போயிட்டேன்" என்றான் உணர்ந்து. 

 

மெல்லிய புன்னகை மட்டுமே பெண் அவளிடம்!!

 

பார்க்கும் பெண்ணிடம் எல்லாம் தோன்றினால் அது காமம்!!

தன் இணையிடம் மட்டும் தோன்றும் உணர்வு மட்டுமே மோகம்!!

 

மோகத்தோடு கூடிய காதல் கூடலில் தப்பில்லை!!

 

"நான் உண்டு என் தொழில் உண்டு என்று நல்லவனாய் இருந்தவனை..

எனக்கு காதலை மட்டுமல்ல மோகத்தையும் கற்றுக்கொடுத்து கெட்டப் பையனா மாத்துனது நீ தானடி!!" என்று அவளருகே படுத்து ஒற்றை விரலால் அவள் முகத்தை அளந்தவாறே அவன் கூற..

ஆச்சரியத்துடன் அவனை கண்திறந்து பார்த்தவள், 

 

"ஹேய்.. நம்பும்படியா சொல்லுங்க நிக்! ஆஸ்திரேலியா எத்தனை பெண்களை பார்த்திருப்பீங்க? எல்லோரையும் விட்டுட்டு இந்த மதுரைக்கார பெண் வந்து உங்களுக்கு காதல் கத்துக் கொடுக்க வந்தாளா?" என்று கேட்டாள் தாரா.

 

ஆனால் அவளுக்கு தெரியும் அவனின் முதல் காதல் அவள் தான் என்று!! ஏனோ மனம் என்று சந்தோஷத்தில் நிரம்பி தழும்பியது. அதனால் அவனை சீண்டினாள்.

 

தன்னை சீண்டும் அந்த செவ்விதழ்களை பார்த்தவுடன் கண்கள் அதில் அழுத்தமாக பதிய இதழ்களை பிடித்து இழுத்தவன் "நான் சொல்றது பொய்யா இல்லை உண்மையானு உனக்கு தெரியலையா என்ன? நீ தான் என் முதல் காதல்!! அன்னைக்கு உன்னை கண்கலங்க.. உதடு துடிக்க.. ரோட்டில் பார்த்தேன் இல்லையா? அப்பவே இங்கு வந்து நீ ஒட்டிக்கிட்ட.." என்று அவன் தன் இடமாக சுட்டிக்காட்ட அதில் மெல்லிய முத்தம் ஒன்று வைத்தாள் தீபதாரா.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top